districts

img

பி.ஆர்.நடராஜனின் இறுதிகட்ட பிரச்சாரத்தில்...

 திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் செவ்வாயன்று மாலை தேர்நிலைத்திடலில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தங்களது பேராதரவை வெளிப்படுத்தினர்.




வண்ணங்கள் பலவாய் எண்ணம் ஒன்றாய்


கருப்பு சிவப்பு

சிவப்பு கருப்பு

சிவப்பு வெள்ளை பச்சை

கருப்பு வெள்ளை கருப்பு

நீலம் சிவப்பு

பச்சை

சிகப்பு


இவையெல்லாம் வெறும் வண்ணங்கள் அல்ல, சித்தாந்தங்களின் தத்துவங்களின் அடையாங்கள். இப்போது அந்த வண்ணங்களை வரிசைப்படுத்திப் பார்த்தால் உண்மை புரியும்.”செப்பு மொழி பதினெட்டுடையாள் எனின் சிந்தனை ஒன்றுடையாள்” என்ற பாரதியின் வரிகள்போல், வண்ணங்கள் வேறானாலும் எண்ணம் ஒன்றுதான். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் மக்கள்விரோத அரசுகள் வீழ வேண்டும். சர்வாதிகாரத்திற்கு நாடு பலியாகி விடாமல் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்.சாதி, மத, இன வெறிகள் சாய்த்து மதநல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையும் காக்க வேண்டும். இதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிவேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும். 


(தோழர் பி.ஆர்.நடராஜன் தேர்தல் பிரச்சார நிறைவுக்கூட்ட எழுச்சியில் உருவானது)

;