பொள்ளாச்சி, ஏப்.10- ஆனைமலை மாசானியம்மன் கோவிலில், சனியன்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனை மலை மாசானியம்மன் கோவிலில் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, கோவில் அலுவலக நிர் வாகம் குறித்தும், தேவைகள் குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.வரதராஜன், ஆனைமலை பேரூராட்சித் தலைவர் கலைச் செல்வி, கோவில் உதவி ஆணையாளர் கருணாநிதி, கண் காணிப்பாளர் தமிழ்வாணன் உட்பட பலர் உடனிருந்தனர்.