திருப்பூர், ஆக.28- விநாயகர் சிலைகள் வைப்பதில் உச்சநீதிமன்றத் தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என திருப் பூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் அளிக் கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருப்பூர் மாவட் டத் தலைவர் முகில்ராசு தலைமையில், மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜிடம் புதனன்று அளிக்கப்பட்ட மனு வில், வரும் செப்.7 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. விநாயகர் சிலை தயாரிக்கும் இடங்களுக்கே போலீசார் சென்று, சிலைகள் தயாரிக்கும் இடத்தில் களிமண் கொண்டு மட் டும் தயாரிக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டு அரசின் அர சாணை எண்:598ஐ அமல்படுத்த, அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். அரசா ணைப்படி பல்வேறு தடையில்லா சான்று வழங்கும் முன், ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களை தவிர வேறு இடத்திலும், புதியதாக சிலைகள் வைக்க அனும திக்கக்கூடாது. சிலைகள் சாலைகளில் இடையூறாக வைக்காமல், சிலைகள் வைக்கப்பட்டுள்ள மேற்கூரை தீப்பிடிக்காத வகையில் அமைக்கவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். தடையில்லா சான்று பெறாமல் அனுமதியின்றி வைக்கப்படும் சிலைகளை உடனடியாக சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படாதவாறு அகற்ற வேண்டும். அதையும் மீறி வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், மேற்கண்ட மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பா ளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் மற்றும் மாந கர காவல் ஆணையரிடமும் அளித்தனர். இந்நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சங் கீதா, மாநகரச் செயலாளர் மாதவன், மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.