உதகை, ஜன.3- அமைப்புசாரா நலவாரிய செயல் பாட்டை சீர்படுத்த வேண்டும், கட்டு மான தொழிலாளர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு கட்டுமான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக நீலகிரி, சேலம், கோவை, நாமக்கல், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் எழுச்சிகரமான ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றது. தமிழக அரசு கட்டுமான தொழிலா ளர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வேட்டி, சேலையுடன் ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், விசா ரணை என்ற பெயரில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கக்கூடாது, பெண்களுக்கு 55 வய தில் ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். அமைப்பு சாரா நல வாரிய செயல்பாட்டை சீர் படுத்த வேண்டும், அனைத்து முறை சாரா நல வாரியங்களுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு பண பயன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், அனைத்து முறை சாரா தொழிலாளர்களுக்கும் வீடு வழங் கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் பெரும் திரளாக நடைபெற்றது. இதன்தொடர்ச்சியாக, நீலகிரி மாவட் டம், உதகை நலவாரிய அலுவலகம் முன்பு சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு நீலகிரி மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட பொருளாளர் நவீன், சிஐடியு நிர்வாகிகள் மூர்த்தி, கணேஷ் உள்ளிட் டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத் தில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். முடிவில் மகேஷ் நன்றி கூறினார்
சேலம்
சேலம் தொழிலாளர் நல வாரிய அலு வலகம் முன்பு சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கத்தின் செய லாளர் செ.கருப்பண்ணன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டி பாபு, மாவட்ட செயலாளர் ஏ. கோவிந் தன் மாவட்ட பொருளாளர் பி. இளங்கோ, கட்டுமான சங்க மாநிலத் துணைத்தலைவர் சி.மோகன், ஜவுளி சங்க செயலாளர் பி. ராமமூர்த்தி உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோவை
கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு கோவை மாவட்ட பொருளா ளர் ஆர்.வேலுசாமி தலைமை தாங்கி னார். இதில், மாவட்ட தலைவர் கே. மனோகரன், ஊரக வளர்ச்சி உள்ளாட் சித்துறை ஊழியர் சங்க பொதுச்செய லாளர் கே.ரத்தினகுமார் உள்ளிட்ட சிஐ டியு இணைக்கப்பட்ட சங்கங்களின் நிர் வாகிகள் உரையாற்றினர். ஆர்ப்பாட் டத்தில் திரளானோர் பங்கேற்றனர். முடி வில் ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் இரா.செல்வம் நன்றி கூறினார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நாமக்கல் மாவட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அசோ கன் துவக்கி வைத்து பேசினார். இதில், மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, கட்டு மான சங்க செயலாளர் கு.சிவராஜ் உள் ளிட்டோர் உரையாற்றினர். இதில், ஏரா ளமானோர் பங்கேற்றனர்.
தருமபுரி
தருமபுரி தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சி.கலாவதி தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்ட செயலாளர் பி.ஜீவா, கட்டு மான சங்க மாவட்ட தலைவர் கிட்டு (எ) சண்முகம், சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர்கள் ஜி.நாகராஜன், சி.அங்கம் மாள் ஆகியோர் உரையாற்றினர்.
ஈரோடு
சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஈரோடு நலவாரிய அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு, கட்டுமான சங்கத்தின் மாவட்ட தலை வர் எச்.ஸ்ரீராம் தலைமை தாங்கினார். இதில், மாநில பொது செயலாளர் டி. குமார், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ். சுப்ரமணியன், கட்டுமான சங்க செயலா ளர் எஸ்.மாதவன், பொருளாளர் கே. பழனிசாமி உள்ளிட்டோர் கோரிக்கை கள் குறித்து உரையாற்றினர்.