தருமபுரி, ஏப்.11- தருமபுரியில் விதிமீறிய ஆட்டோக்க ளுக்கு போக்குவரத்து காவல்துறை அபரா தம் விதித்தனர். மேலும், 4 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். தருமபுரி நகரப் பகுதியில் 2500க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோ மற்றும் அபி ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. நகர பகுதியில் நகரப் பேருந்துகள் பல பகுதி களுக்கு குறைவாக இயக்கப்படுவதால், பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம், பென்னாகரம் சாலை, திருப்பத் தூர் சாலை, மொரப்பூர் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் ஆட்டோ வையே நம்பி உள்ளனர். ஆட்டோ தொழிலில் அதிக லாபம் இருப்பதால் அரசு துறையைச் சார்ந்தவர்கள் தனி ஆட்களை வைத்து 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை இயக்கு வருகின்றனர் இந்த ஆட்டோக்களுக்கு பர் மிட், ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ், ஆகி யவை இல்லாமலேயே இயக்கப்பட்டு வரு வதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து ஆட்டோகளில் அதிக ஆட் களை ஏற்றுவது, ஓட்டுனரின் இருபக்கமும் பயணிகளை அமர வைத்து பாதுகாப்பற்ற முறையில் ஆட்டோக்களை இயக்கி வருவ தாக காவல் துறைக்கு வந்த தொடர் புகாரை யடுத்து செவ்வாயன்று நெசவாளர் காலனி பகுதியில் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சின்னசாமி மற்றும் சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் ரகுநாதான் காம ராஜ் உள்ளிட்டோர் சோதனையிட்டனர். அதில் உரிமம் பெறாத ஆட்டோக்கள், தகுதிச் சான்று இல்லாத 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சரியான இருக்கை பொருத்தாத, காப்பீடு இல்லாதது, போக்கு வரத்து விதி மீறலை மீறி அதிக ஆட்களை ஏற் றிச் செல்வது, ஓட்டுநர் உரிமம் இல்லாதவை என்பது போன்ற விதிமீறல்களுக்கான சோதனையில் 50 ஆட்டோக்களுக்கு அப ராதம் விதிக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்கள் முறையாக ஆவ ணங்கள் ,ஓட்டுனர் உரிமம் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும். விதிமுறை மீறி அள வுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றுவது பாரம் ஏற்றும் ஆட்டோக்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.