கோவை, செப்.28- நூற்பாலைகள் பஞ்சுக்கு இறக் குமதி வரியை குறைக்க வேண்டும் என இந்திய ஸ்பின்னிங் நூற்பாலை உரிமையாளர் சங்கம் ஆண்டு பேரவை கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டிபிரிவில் இந்திய ஸ்பின்னிங் நூற்பாலை உரி மையாளர் சங்கத்தின் 17 ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு, சங்கத் தலைவர் ஜி.சுப்பிர மணியம் தலைமை வகித்தார். இது குறித்து இச்சங்கத்தின் தலைவர் ஜி. சுப்பிரமணியம் கூறுகையில், நூற் பாலைகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பஞ்சுக்கு 11% வரி விதிப்பதை நீக்க வேண்டும் அவ்வாறு செய்தால் இந்திய நூற் பாலைகள் உலக நாடுகளுடன் போட்டியிட முடியும். விவசாயிகளிட மிருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சை நேரடியாக பஞ்சாலைக ளுக்கு மட்டுமே விற்க வேண்டும். விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது. ஒன்றிய அரசு விவசாயிகளிடமிருந்து வாங்கி இருப்பு வைத்து விற்கும் பஞ்சுக்கு உண்டான வட்டி விகிதம் 12% வட்டி யில் இருந்து 7% வட்டியாக மாற்ற வேண்டும். மாநில அரசு தற் ்போதைய நூற்பாலைகளின் நிலையை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை வருடா வருடம் உயர்த் தக்கூடாது. கடந்த 4 வருடங்களாக கொரோனாவுக்கு பின்பு நூற்பாலை தொழில் மிகவும் நலிவடைந்து காணப் படுகிறது. தென்னிந்தியாவின் மான் செஸ்டர் என்கிற அந்தஸ்த்தை இழக் கும் நிலையில் தற்போது உள்ளது. மேலும், நலிந்து போகும் நூற்பாலை களுக்கு கடன் அளித்து அதற்கு ஏழரை சதவீத வட்டியாக வழங்க வேண்டும். நூற்பாலை தொழில் என் பது பெரும் பொருள் செலவில் செய் யப்படுகிற தொழிலாகும். இதை நன் றாக நடைபெற அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வங்கதேசத் தில் தற்போது நிலவி வரும் சூழ் நிலையை பயன்படுத்திக் கொண்டு இந்திய நூற்பாலைகளுக்கு பயன் ஏற்படும் வகையில் ஒன்றிய அரசு வழி வகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில், திரளான நூற் பாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கூட்டத்தில் பொருளாளர் கே.கமலநாதன் நன்றி கூறினார்.