தருமபுரி மாவட்ட மக்கள், வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களை மட்டுமே பிரதானமாகக் கொண் டுள்ளனர். இங்கு பெரும்பகுதி நிலங்கள் பருவமழையை நம்பியிருக்கும் மேட்டுப்பாங் கான பகுதிகளாகும். வேளாண்மையை தவிர வேலைவாய்ப்பு ஏற்ற எந்தத் தொழிலும் தரும புரி மாவட்டத்தில் இல்லை. ஒருங்கிணைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக – கர்நாடக எல்லையான ஒசூரில் சிப்காட் தொழிற் பேட்டை தொடங்கப்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ண கிரி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்ட பின், தருமபுரி மாவட்டத்திற்கென தொழிற்சாலை களைக் கொண்டுவரவோ, வேலைவாய்ப்பு களை உருவாக்கவோ எந்தத் திட்டமும் குறிப் பிடும் படியாக மேற்கொள்ளப்படவில்லை. இத னால் தருமபுரி மாவட்ட இளைஞர்கள் பெரும் பாலானோர் வேலை தேடி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, சென்னை போன்ற மாவட்டங்களுக்கும், கர்நா டக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு வுக்கும் சென்றுள்ளனர். தருமபுரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 4 லட் சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சொந்த ஊரில் வேலை இல்லாததால் குடிபெயர்ந்துள் ளனர்.
வெற்று அறிவிப்புகள் வேலைக்குதவாது
பள்ளிக்கல்வி அல்லது உயர்கல்வி முடித்த வுடன், வேலைவாய்ப்புக்காக தருமபுரி மாவட்ட இளைஞா்கள் வெளியூர் சென்று விடுகின்றனா். அதிலும் குறிப்பாக, ஆயிரக்கணக்கான குடும் பங்கள் பெங்களூரில் தங்கி கட்டுமானத் தொழி லைச் செய்து வருகின்றன. இவர்கள் அனை வரும் திருவிழாக்காலங்களில் மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். இளைஞா்கள் வேலை தேடி பிற மாவட்டங்கள், மாநிலங்க ளுக்குச் செல்வதைத் தடுத்து, தங்களின் சொந்த ஊரிலேயே குடும்பத்துடன் தங்கிப் பணிபுரியும் வகையில், தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டையைத் தொடங்க வேண்டும் என்பது மாவட்ட மக்களின், இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட் டங்களை நடத்தி வந்துள்ளது. இப்போராட் டங்களின் மூலம் மக்களின் கருத்தை ஒரு முகப்படுத்தியுள்ளது. இதன்தொடர்ச்சியாக தருமபுரி மாவட்ட இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என கடந்த 2009 ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசு அறிவித்தது. இருப்பினும், அதற்கான பணிகள் ஏதும் துவக்கப்படவில்லை. 2011 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அதிமுக-வும் அறிவித் தது.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து சில ஆண்டு கள் கழித்து தருமபுரியில் சிப்காட் அமைக்க நல்லம்பள்ளி வட்டாரத்தில் நிலங்களைக் கைய கப்படுத்த ஓர் அலுவலகமும் அமைக்கப்பட்டது. இப்பணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நிலை யிலான அதிகாரி ஒருவர், இரண்டு வட்டாட்சி யர்கள் பணியமர்த்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அதகப்பாடி, தடங் கம், பாலஜங்கமனள்ளி ஆகிய பகுதிகளில் ஆயிரத்து 783 ஏக்கா் நிலங்கள் அடையாளம் காணப்பட்டன. இதில் ஆயிரத்து 183 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களாகும். மீதமுள்ள 550 ஏக் கர் நிலம் பல்வேறு விவசாயிகளுக்குச் சொந்த மான பட்டா நிலமாகும். கடந்த 2013 ஆம் ஆண் டில் துவங்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் பணி, பல ஆண்டுகளைக் கடந்து தற்போதும் நடைபெற்று வருகிறது. அரசு புறம்போக்கு நிலங் கள் அடையாளம் காணப்பட்டு கையகப்படுத் தப்பட்டன. இதற்கிடையில், கடந்த 2017 ஆம் ஆண்டு தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவின்போது பேசிய, அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனி சாமி, தருமபுரியில் சிப்காட் அமைக்கப்படும் என அறிவித்தார்.
சிபிஎம் கோரிக்கை மாநாடு
2021 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத்தொடர்ந்து, தற்போதைய திமுக அரசு அண்மையில் சட்டப்பேரவையில் தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை விரை வில் அமைக்கப்படும் என மீண்டும் அறிவித்தது. இதைத்தொடர்ந்து 2022 ஆண்டு ஜனவரி 20 தேதி யன்று காணொலி வாயிலாக தருமபுரி மாவட்டத் தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி இளைஞர்க ளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ஏதுவாக தருமபுரியில் புதிய சிப்காட் தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்பின்பு மே 7 ஆம் தேதியன்று அப்போ தைய மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, தரும புரி சிப்காட் பணியில் கோவையில் அறிவிக்கப் பட்ட சிம்பிள் எனர்ஜி நிறுவனத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்நிறு வனத்தினரும், தருமபுரி மாவட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் தொழில் தொடங்குவதற் கான இடத்தை ஆய்வு செய்து,
தேர்வு செய் துள்ளனர் என தெரிவித்தார். மேலும், சிப்காட் டிற்கு ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரி வித்தார். தருமபுரி சிப்காட் அமைக்கும் பணியில் அறிவிப்பும் முதல் நிலம் கையகப்படுத்தப்பட்ட பணிகளை தவிர தொழிற்பேட்டை செயல்படுவ தற்கு தேவையான பூர்வாங்க பணிகள் எதுவும் நடைபெறவில்லை. சொந்த ஊரிலே வேலை வாய்ப்பு என்கிற அரசின் அறிவிப்பு வெற்று அறி விப்போடு இருந்துவிடக்கூடாது. இளைஞர் களின் வேலையின்மை பிரச்சனை தலை விரித்தாடுகிற நிலையில், ஆக்கப்பூர்வமான இதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது. இதனையொட்டி தருமபுரியில் சிப்காட், அரூர், பென்னாகரத்தில் சிட்கோ தொழிற் பேட்டை துவங்க வேண்டும். தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். ஒகேனக்கல் நீர் மின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஜூலை 22 ஆம் தேதியன்று (நாளை) தருமபுரி குமாரசாமிபேட்டை வாரியார் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-ஜி.லெனின், தருமபுரி