districts

img

குலத்தொழில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதா?

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்   ஈரோடு, செப்.22- குலத்தொழிலை திணிக்கும் மோடி அரசின் விஸ்வகர்மா யோஜனா திட் டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஈரோட்டில் வெள்ளியன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். குடும்ப தொழில் செய்யும் இந்திய குடிமகனுக்கு நிதியுதவி அளிக்கும் திட் டத்தை பாஜக தலைமையிலான ஒன் றிய அரசு அறிவித்தது. குடும்ப பாரம் பரிய தொழில் செய்ய ஊக்குவிப்பது இத்திட்டம் என மோடியால் அறிவிக்கப் பட்டது. செப்டம்பர் 17 ஆம் தேதியன்று தில்லியில் பிரதமர் தொடங்கி வைத் தார். ஒன்றிய அரசின் இந்த குலத்தொ ழில் ஆதரவு திட்டத்தை எதிர்த்து நாடு  முழுவதும் கண்டன குரல்கள் எழுந்து வருகிறது. இதன்ஒருபகுதியாக விஸ்வ கர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நால் ரோட் டில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் பிபி.பழனிசாமி  தலைமை ஏற்றார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மா.அண்ணாதுரை, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், தமிழ் புலி கள் கட்சியின் சிந்தனைச் செல்வன், சிஐ டியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சிறுத்தை வள்ளுவன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். பெரும் திரளானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் முடிவில், சுரேஷ் பாபு நன்றி கூறினார்.