உதகை, ஜூலை 6- விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வளர்த்து வரும் சில்வர் ஓக் மரங்களை வெட்டி விற்பனை செய்ய உட னுக்குடன் அனுமதி வழங் கப்படும் என வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், கட் டப்பெட்டு வனசரகத்திற்குட் பட்ட ஒன்னதலை வனப் பகுதியில் 11 ஹெக்டர் பரப்ப ளவில் வளர்ந்திருந்த நிலத் தடி நீரை அதிகம் உறிஞ்சும் அந்நிய நாட்டு மரங்கள் மற்றும் தாவரங்கள் வெட்டி அகற் றப்பட்டன. அதற்கு பதிலாக, அங்கு சோலை மர நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் நடை பெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து தமி ழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். இதையடுத்து, அவர் இங் கிலாந்து அரசின் பசுமை நிழற்குடை விரு தைப்பெற்ற வனத்துறைக்கு சொந்தமான கோத்தகிரி லாங்வுட் சோலைக்கு சென்றார். அங்கு ரூ.5 கோடி செலவில் அமைக்கப் படும் சூழல் மையம், சோலை மர நாற்றுகள் தயாரிக்கும் நர்சரி, சூழல் சுற்றுலா அழைத் துச் செல்ல வாங்கப்பட்டுள்ள பேட்டரி வாக னம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் விவசாயி கள் தங்களது சொந்த நிலங்களில் வளர்த் துள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்டி விற் பனை செய்ய தற்போது வனத்துறை அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. விவசாயிகள் அவ்வாறு சில்வர் ஓக் மரங் களை வெட்ட அனுமதி கோரினால், உடனுக் குடன் அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஊடு பயிராக வளர்க்கும் சில்வர் ஓக் மரங்களை பிற மாநிலங்களில் அனுமதி எதுவும் பெறாமல் வெட்டி விற்பனை செய்வது போல அனு மதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த அனுமதி பெறும் நடை முறையை எளிமையாக்க அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக் கப்படும். உலக புகழ்பெற்ற லாங்வுட் சோலையில் புதர் செடிகள் கூட அகற்றப்படாது. மேலும், இந்த சோலையில் ஏற்கனவே சோலை மர நாற்றுகள் தயாரிக்க நர்சரி இருந்த அதே இடத்தில் மீண்டும் நர்சரி அமைக்கப்படும். தற்போது நர்சரி உள்ள காலியிடத்தில் பல்லு யிர் சூழல் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக் கப்படும். இதற்காக தமிழக அரசு ரூ.5 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள் ளது. வேறு எந்த கட்டுமானப் பணிகளும் அங்கு மேற்கொள்ளப்படாது, என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலு வலர் கவுதம், வனச்சரகர்கள் உட்பட வனத் துறை அதிகாரிகள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.