districts

img

சட்டவிரோதமாக நொரம்பு மண் கடத்தல்

தருமபுரி, ஜன.31- பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள மலைகளை குடைந்து நடைபெற்று வரும் மண் கடத்தலை தடுக்க வேண் டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி களான மாரண்டஹள்ளி, புலிகரை, சர்க்கரை ஆலை பின் புறம், பாறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஊராட்சி  ஏரிகளிலிருந்து இரவு, பகலாக டிராக்டர் மற்றும் டிப்பர்  லாரிகளில் சட்டவிரோதமாக நொரம்பு மண் கடத்தல் சம்ப வம் நடந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மலைகளை குடைந்தும், ஊராட்சி ஏரிகளில் இருந் தும் நொரம்பு மண் கடத்தும் சமூக விரோதிகளை அதிகாரிகள்  கண்டுகொள்வதில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள் ளனர். இதனால் கனிம வளங்கள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனிநபர்களின் வருமானத்திற்காக அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. பாலக்கோடு ஒன்றியத் தில் உள்ள பல்வேறு ஏரிகளிலும், மலைப்பகுதிகளிலும் அனு மதியின்றி சட்டவிரோதமாக பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரி கள் மூலம் மண், மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகளும், பொதுமக்களும் கேள்வி எழுப்பினால், வரு வாய்த்துறையினரின் அனுமதி பெற்றுதான் மண் அள்ளுகி றோம் என கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகு றித்து உரிய கவனம் செலுத்தி, கணிம வளக் கொள்ளையை தடுத்த நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.