districts

img

தடை மீறி விற்பனை: இறைச்சிகள் பறிமுதல்

கோவை, ஜன.16- திருவள்ளுவர் தினமான திங்களன்று விற்பனை செய்வ தற்காக வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சிகளை அரசு அதி காரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் திங்களன்று திருவள்ளுவர் தினம் கொண் டாடப்பட்டது. அன்றைய தினத்தில் (திங்களன்று) தமிழக அர சால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டது. எனவே, தமிழகம் முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி, நக ராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடை களை மூடும்படி அரசால் தெரிவிக்கப்பட்டது. மேலும், உள் ளாட்சி அமைப்புகளால் இறைச்சி அறுவைமனைகள் மற்றும்  இறைச்சி கடைகள் செயல்படாது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது உள்ளாட்சித்துறை அதிகாரிகளால் கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் திங்களன்று பெரும்பாலான இறைச்சி கடைகள் செயல்படாததால், இறைச்சி வாங்க வந்த மக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேசமயம் வீட்டு தோட்டங்களில் ஆடு, கோழி வளர்ப் போர் அவர்களின் வீட்டு தேவைக்களுக்கு ஏற்ப இறைச்சி களை வெட்டி கொண்டனர். இதுதவிர பல்வேறு இடங்களில் விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த இறைச்சி கடைகள் மூடப் பட்டு, இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதி காலை முதலே ஆய்வு மேற்கொண்டு, விதிகளை மீறி செயல் பட்ட இறைச்சி கடைகளில் இருந்து இறைச்சிகளை பறி முதல் செய்தனர்.

திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு

2054 ஆம் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு தினம் திங்க ளன்று கடைப்பிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள  திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வ லர்கள், தமிழ் பற்றாளர்கள் என பல்வேறு தரப்பினர் திரு வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர். இதன்ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் உள்ளே உள்ள திருவள்ளூர் சிலைக்கு, ஏராளமான பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர். இதனிடையே, கடந்த காலங்களில், மதவாதிகள் திரு வள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பள்ளிபாளையம் போலீசார் திரு வள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.