districts

img

சட்டவிரோத மதுவிற்பனை - 4 பேர் கைது

நாமக்கல், ஜன.17- பள்ளிபாளையம் அருகே சட்டவிரோதமாக மதுவிற்ப னையில் ஈடுபட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளுவர் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழு வதும் அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக நாமக்கல் மாவட்ட பள்ளிபா ளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து  பள்ளிபாளையம் போலீசார், பல்வேறு சோதனைகளில் ஈடு பட்டனர். அப்பொழுது பள்ளிபாளையம் அருகே உள்ள தெற் குபாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், சட்டவிரோதமாக, இனிப்பு பெட்டிகளுக்கிடையே மது பாட் டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர்.  தொடர்ந்து, மதுபான விற்பனையில் ஈடுபட்ட விழுப்பு ரம் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை, ரவிசங்கர் ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஐந்து பனை  பகுதியில் வீட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்த அழகுபாண்டி, வடிவேலு  உட்பட நான்கு நபர்களை பள்ளி பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். இவர்களிடமிருந்து மொத்தம் 860 மதுபான பாட்டில் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 40 ரூபாய் ஆயிரம் என போலீசார் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.