திருப்பூர், மார்ச் 14- அதிமுக ஆட்சியில் முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட 8.90 ஏக்கர் நிலத்தை மீட்டுப் பொழுது போக்கு பூங்கா அமைக்க வலியுறுத்தி நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வியாழனன்று உண்ணாவி ரத போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட் பட்ட சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் சுமார் 440 ஏக் கர் பரப்பளவு கொண்ட நஞ்சராயன் குளம் அமைந்துள் ளது. இந்த பகுதியை தமிழக அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது. இதன் முன் பகுதியில் சுமார் 8.90 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை கடந்த அதி முக ஆட்சியில் முறைகேடாக பட்டா மாற்றம் செய்து தனியார் தொண்டு (விகாஸ் சேவா டிரஸ்ட்) நிறுவ னத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்டு பொழுதுபோக்கு பூங்கா அமைக்க கோரி சர்க்கார் பெரிய பாளையம் ஊராட்சி அலுவலகத்திற்கு எதிரே நஞ்சுரா யன் குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அடையாள உண் ணாவிரத போராட்டம் நடைபெற்றது.