districts

img

இளம்பிள்ளை: வாக்கு எண்ணும் மையம் முன்பு வேட்பாளர்கள் போராட்டம்

இளம்பிள்ளை.பிப்.20-  இளம்பிள்ளை வாக்கு எண் ணும் மையத்தில் பொருத்தப்பட்டி ருந்த கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை எனக்கூறி வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் கடந்த சனிக் கிழமையன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில், இளம் பிள்ளை, ஆட்டையாம்பட்டி, மல் லூர் ஆகிய மூன்று பேரூராட்சிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந் திரங்கள் இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் வைக்கப்பட்டிருந்தது. இந்நி லையில், ஞாயிறன்று இரவு 11  மணிக்கு வாக்கு எண்ணும் மை யத்தில் வைக்கப்பட்டிருந்த, கண் காணிப்பு கேமராக்கள் பழுத டைந்து காட்சிப் பதிவுகள் நிறுத் தப்பட்டதாக தகவல் பரவியது.  இதைத்தொடர்ந்து அனைத்து கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர் கள் வாக்கு எண்ணும் மையத்தில் முன்பு திரண்டனர். மேலும், தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவலர்க ளுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் உயரதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச் சுவார்த்தை நடத்தினர்.  இதன்பின், வேட்பாளர்கள் மட் டும் உள்ளே சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட தேர்தல் அலுவலர்கள் அனுமதித்தனர். மேலும், கண்காணிப்பு கேம ராக்கள் நல்ல முறையில் இயங்கு வது குறித்து அவர்களுக்கு விளக் கம் அளிப்பதற்காக தொழில் நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப் பட்டனர். இச்சம்பவத்தால் இளம் பிள்ளையில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.