பொள்ளாச்சி, ஏப்.28- போக்குவரத்து துறையை தனி யாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என கோவை மாவட்ட அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. கோவை மாவட்ட அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் 33 ஆவது ஆண்டு பேரவைக்கூட்டம் பொள்ளாச்சி ராஜ் மஹாலில் தோழர்கள் கே.சி.கருணாகரன், பி.ஏ.சலீம், டி.காந்தி, கே.ராஜாமணி நினைவரங்கத்தில் நடைபெற்றது. இப்பேரவைக்கு அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்க மாவட்ட தலை வர் எம்.பரமசிவம் தலைமை வகித் தார். சங்கத்தின் கொடியினை கோவை மாவட்ட கௌரவ தலை வர் ப.காளியப்பன் ஏற்றி வைத்தார். உதவிச்செயலாளர் என்.சரவண குமார் வரவேற்புரையாற்றினார். இதில், சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் ஆர்.கோபால், ஈரோடு மண் டல பொதுச்செயலாளர் டி.ஜான் கென்னடி, சம்மேளன பண்முக தலைவர் என்.முருகையா, சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் கே.மகாலிங்கம் ஆகியோர் வாழ்த் திப் பேசினர். இக்கூட்டத்தில், தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தை தனியா ரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். பேருந்து பராம ரிப்பிற்கான உதிரிபாகங்களை வழங்க வேண்டும்.
தொழிலாளர் கள் மீதான கோவை கோட்ட அதி காரிகளின் அராஜ போக்கினைக் கண்டித்தும், மலைப்பகுதிகளில் பேருந்து இயக்கும் ஓட்டுநர் மற் றும் நடத்துநர்களுக்கு சிறப்பு செலவு தொகை வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து, அரசு போக் குவரத்து ஊழியர் சங்க கோவை மாவட்ட தலைவராக எம்.வேளாங் கண்ணி ராஜ், செயலாளராக எம்.பர மசிவம், பொருளாளராக ஆர்.கோபால் மற்றும் 21 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகள் குழு தேர்வு செய் யப்பட்டது. நிறைவாக, போக்கு வரத்து ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் உரையாற்றினார். முடிவில் பொள்ளாச்சி பி2 கிளைச் செயலா ளர் டி.பொன்னுசாமி நன்றி கூறி னார்.