சேலம், பிப்.15- சேலத்தில், தமிழ்நாடு முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலை யில், அவர் சென்ற சிறிது நேரத்தில் ஓமலூர் பேருந்து நிலையத்தின் அருகில் 30 அடி உயர போக்கு வரத்து சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தில் தருமபுரி, சேலம் மேட்டூர் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் இருந்து வரும் வாக னங்களை முறைப்படுத்த போக்கு வரத்து காவல்துறை சார்பில் சுமார் 30அடி உயரமும் சுமார் 12அடி விட்டமும் கொண்ட ராட்சத சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பங்கள் தரமற்றதாக இருக்கிறது என எந்தநேரத்திலும் விழுந்துவிடும் என அப்பகுதியில் உள்ள பயணிகள், பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள கார் நிறுத்த ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் பல முறை போக்குவரத்து காவல் துறை யினரிடம் புகார் தெரிவித்துள்ள தாக கூறப்படுகிறது. ஆனால், எவ்வித நடவடிக் கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்துள்ளனர். இந்நிலை யில் புதனன்று சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென சிக்னல் கம்பம் அடியோடு சரிந்து விழுந்தது. அந்நேரத்தில், பொதுமக்கள் மற்றும் பேருந்துகள் அங்கு இல் லாததால் பெரும் விபத்து தவிர்க் கப்பட்டது. அதே சாலையில், முதல்வர் ஸ்டாலின் சில மணிநேரத்திற்கு முன் சென்றார். அப்போது அங்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முதல்வருக்கு வர வேற்பளித்தது குறிப்பிடத்தக்கது. முதல்வர் சென்ற பிறகு, பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்ற நிலையில் கம்பம் சாய்ந்த தால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. பொதுமக்கள், பயணிகள் நிறைந்து எப்பொழுதும் பரபரப் பாக காணப்படும் நகரின் மையப் பகுதியில் அமைக்கப்படும் சிக்னல் கம்பங்கள், தெருவிளக்குகளை முறையாக கண்காணிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.