districts

மலைப்பகுதிகளில் பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன்: ஆ.ராசா எம்.பி., உறுதி

உதகை, ஜூன் 27- ஒன்றிய அரசின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை மலைப்பகுதிகளுக்கு அதி கரித்து தர வேண்டும் என, நாடாளு மன்ற கூட்டத்தொடரில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார். உதகையில் உள்ள கூடுதல் ஆட் சியர் அலுவலகத்தில் மாவட்ட அள விலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தலைமையில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் உள் ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்ட திட்டங்கள் நிலை குறித்து அதி காரிகளுடன் கேட்டறியப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், காவல் கண்காணிப் பாளர் பிரபாகர், வன அலுவலர் கவு தம், அரசு போக்குவரத்து கழக மண் டல மேலாளர் அம்பலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின் ஆ.ராசா எம்.பி., செய் தியாளர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணி களும் 90 சதவிகிதம் அளவிற்கு நிறைவு பெற்றுள்ளன. வனத்துறை அனுமதி பெறுவதில் உள்ள சில நடைமுறை சிக்கல்கள் மற்றும் இதர பிரச்சனை கள் காரணமாக 8 சதவிகித பணிகள் தேக்க நிலையில் உள்ளன. இப்பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள் ளது. நீலகிரி மாவட்டத்தில் பல  இடங்களில் பேருந்துகளை இயக்குவ தில் பிரச்சனைகள் உள்ளன. பழங் குடியின மக்கள் வாழக்கூடிய தொலை தூர பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்குவதில் சிரமம் உள்ளதாக  புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக போக்குவரத்து துறை அலுவலர் களை அழைத்து விவாதிக்கப்பட் டது. மேலும், தொகுப்பு வீடுகள் கட்டு மான பணியில் உள்ள பிரச்சனைக ளுக்கு தீர்வு காண முடிவு செய்யப் பட்டது. ஒன்றிய அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.2.10 லட்சம் வழங்கப் படுகிறது. இந்த தொகை சமவெளி பகுதிகளில் வீடு கட்டுவதற்கே போது மானதாக இல்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத் திற்கு கட்டுமான பொருட்களை கொண்டு வருவதற்கே இந்த நிதி  போதுமானதாக இல்லை. சமவெளி பகுதிகளை காட்டிலும் கட்டுமான  பொருட்களின் விலை நீலகிரிக்கு வரும் போது 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகமாக இருக்கும். ஒன்றிய அர சின் பசுமை வீடுகளுக்கு நிதியுதவி திட்டத்தை நாடு முழுவதும் மலைப் பகுதிகளில் மேற்கொள்ளும்போது 10 முதல் 15 சதவிகிதம் வரை நிதியை அதிகரித்து வழங்க வேண்டும் என்ற  கோரிக்கை உள்ளது. வரும் நாடாளு மன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து விவாதிக்க முயற்சிகள் மேற்கொள்ள உள்ளேன். மேட்டுப்பாளையம் – உதகை இடையே கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.