உடுமலை, மே 29- நூலகத்தை பயன்படுத்தினால் வாழ்க் கையில் முன்னேறலாம் என நூலகத்தை பயன்படுத்தி முனைவர் பட்டம் பெற்ற சுந்தர ராஜன் என்பவர் கூறியுள்ளார். கடந்த வாரம் பாரதியார் பல்கலைக்கழ கத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். அப் போது பருத்தி குறித்த ஆராய்ச்சிக்கு சுந்தர ராஜன் என்பவருக்கு பட்டம் வழங்கப் பட்டது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை நூலகம் எண்:2 நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் முனைவர் சுந்தர ராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். வட்ட ஆலோசகர் எம்.பி.ஐயப் பன், கனரா வங்கி பணி நிறைவு மேலாளர் கே.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜய லட்சுமி வரவேற்றார். இதில், சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்ட உடுமலை வட் டார போக்குவரத்து அலுவலக கண்காணிப் பாளர் ப.அருணாசலம், முனைவர் பட்டம் பெற்ற சுந்தரராஜனுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார். இதைத்தொடர்ந்து முனைவர் சுந்தர்ரா ஜன் ஏற்புரையாற்றுகையில், நூலகத்தை பயன்படுத்தியதால் என்னால் இந்த அளவு உயர முடிந்தது. எனது ஆராய்ச்சிக்கு பல் வேறு வகையில் இந்த நூலகம் மற்றும் நூலகர்கள் உதவி செய்தனர். மாணவர் கள் நூலகத்தை அதிகளவு பயன்படுத்துவ தில் ஆர்வம் காட்ட வேண்டும், என்றார். மேலும், ஏழை விவசாயி மகனான எனக்கு பொருளாதார வசதி இல்லாததால் அரசு பள் ளிகளிலேயே படித்து அரசு கல்லூரியில் எனது மேற்படிப்பைத் தொடர்ந்து, மேலும் புத்தகங்கள் படிப்பதற்காக நூலகத்தை பயன்படுத்தினேன். இந்த நூலகம் எனது வளர்ச்சியில் இன்று வரை முக்கிய அங்க மாக உள்ளதென பெருமிதமாக தெரிவித் தார்.