districts

img

நீதிமன்றத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் கைது

கோவை நீதிமன்ற வளாகத்திலேயே மனைவி மீது கணவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் கவிதா என்ற பெண் மீது அவரது கணவர் சிவக்குமார் என்பவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.இதனால் காயமடைந்த அப்பெண் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
 ஆசிட் வீசிய நபரை அருகிலிருந்த வழக்கறிஞர்கள் பிடித்து அடிக்க தொடங்கியுள்ளனர் இதனால் போலீசாருக்கும் வழக்கரிஞர்களுக்குமிடையே கடும் வாக்கிவாதம் ஏற்பட்டது அதன் பின் நீண்ட நேரத்திற்கு பிறகு போலீசார் சிவக்குமாரை மீட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மீது 40 சதவிகித ஆசிட் வீசப்பட்டுள்ளதாகவும் அருகில் இருந்த 5க்கும் மேற்பட்டவர்கள் மீதும் ஆசிட் பட்டதால் அவர்களும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சனையின் காரணமாக தான் தனது மனைவி மீதே கணவர் ஆசிட் வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

;