கோவை, ஏப்.5- நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டுவதற்கு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து பொதுமக் கள் அதிகம் கூடும் இடங்களிலும் கல்லூரிகளி லும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள மாற்று பாலினத்த வர்கள் ஒன்றிணைந்து தேர்தல் விழிப்பு ணர்வு கோலங்களை வரைந்தனர். இதனை கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்களிப் பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள் ளப்பட்டது.