கோவை, ஆக.9- பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவ, மாண வர்கள் உயர்கல்வி பயில்வதற்கு மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் ஆக.16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது, கலைஞரின் நூற்றாண்டு விழா வினை முன்னிட்டு பொள்ளாச்சி நாடா ளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவ, மாணவர்கள் உயர்கல்வி பயில்வ தற்கு மாபெரும் கல்வி கடன் வழங் கும் முகாம் பொள்ளாச்சி நாடாளு மன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெறவுள்ளது. அதன்படி, உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி வால்பாறை, ஆனை மலை ஆகிய வட்டத்திற்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு வரு கின்ற ஆக.16 ஆம் தேதியன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பொள்ளாச்சி, உடுமலை சாலையில் உள்ள டாக்டர் மாகலிங்கம் பொறியி யல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்திலும், கிணத்துக்கடவு, சூலூர், தொண்டாமுத்தூர், வட்டத் திற்குட்பட்ட மாணவ, மாணவியர்க ளுக்கு ஆக.18 தேதியன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஈச்ச னாரியில் உள்ள கற்பகம் பல்கலைக் கழகத்திலும் மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளது. நிர்வாக ஒதுக்கீடு மற்றும் கலந் தாய்வில் ஒதுக்கீடு பெறும் மாணவர் கள் அனைவரும் கல்விக்கடன் பெற தகுதியுடையவர்கள். நிர்வாக ஒதுக் கீட்டில் கல்லூரியில் சேரும் பொதுப் பிரிவு மாணவர்கள் 60 சதவிகிதம் மதிப்பெண்களும், எஸ்சி/எஸ்டி மற் றும் பெண்கள் 50 சதவிகிதம் மதிப் பெண்களும் பெற்றிருக்க வேண்டும். கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர் களுக்கு இந்த மதிப்பெண் வரம்புகள் இல்லை.
கல்விக்கடன் பெற விரும் பும் மாணவர்கள் ஆதார்கார்டு, பேன் கார்டு, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கி கணக்கு எண், கல்லூரி சேர்க்கை ஆணை, கல்லூரி மாணவர் என்கிற சான்று (Bonofide), கல்லூரி செலவினங்களுக்கான சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, முதல் பட் டதாரி சான்று ஆகிய ஆவணங்களு டன் ”வித்யாலட்சுமி” என்ற இணைய த்தில் பதிவிட வேண்டும். ரூ.4 லட்சம் வரை கல்விக்கடன் பெற எவ்வித பிணையமும் கொடுக்க வேண்டியது இல்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை மூன்றாம் நபர் உத்திரவாத கையெழுத்து மட் டும் போதுமானது. ரூ.7.50 லட்சத் திற்கு மேல் கடன்தொகைக்கு இணை யான சொத்து பிணையம் கொடுக்க வேண்டும். கல்விக்கடனை படிப்பு முடிந்து ஒரு ஆண்டிற்கு பிறகு 120 மாத தவணைகளில் கட்டலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கியை அணுகி ஆலோ சனை பெறலாம். எனவே, உயர்கல்வி பயில்வதற்கு மாணவ, மாணவியர் கள் இம்முகாமில் கலந்துகொண்டு, ”வித்யாலட்சுமி” என்ற இணையதளத் தில் உரிய சான்றுதழ்களுடன் விண் ணப்பித்து கல்விக்கடன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.