districts

img

போகி மேளம் தயாராவது எப்படி? - எஸ்.ராமு

போகிப் பண்டிகையை யொட்டி செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் புறவழிச்சாலையில் உள்ள அருந்ததிபுரத்தில் மொத்த விலைக்கு போகி மேளம் தயாராக உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி கொண்டாடப்படுகிறது. போகியை யொட்டி பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் தேவையற்ற பொருட்களை விடியற்காலை தீயிட்டு கொளுத்தி குழந்தை கள் போகி மேளம் அடித்து கொண்டாடுவது வழக்கம். இந்த போகி மேளம் தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராள மான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் தயாரிப்பு முறை குறித்து அருந்ததி புரத்தைச் சேர்ந்த விற்பனையாளர் ரமணி மாத்தையா கூறுகையில், மாட்டுத் தோல் வியா பாரிகளிடம் இருந்து தோல் வாங்கப்பட்டு, அதிலிருந்து ஜவ்வு பிரித்து சுண்ணாம்பு நீரில் மென்மையாகும் வரை ஊற வைத்து சுத்தம் செய்யப்படும். பின்னர், மண்பாண்டத் தொழிலாளர்களிடம் இருந்து வாங்கி வைத்த கந்திரி எனப்படும் மண்ணாலான மண்வட்டில் மீது பசை போட்டு தோலை ஒட்டி காய வைக்கப்படும். அதன்பின் தோலின் மென்மைக்கு ஏற்றவாறு ஓசை இருக்கும். மேளம் தயாரிக்கத் தேவைப்படும் தோல்,

சுண்ணாம்பு, கந்திரி என்ற மண்வட்டில் உள்ளிட்ட மூலப் பொருட்களை வாங்க அந்தந்த உரிமையாளர்களிடம் முன்கூட்டியே பணம் செலுத்தி விடுவோம். ஆண்டுக்கு ஒருமுறை தயாரிக்கப்படும் இந்த போகி மேளத்தின் விற்பனை அண்மைக் காலமாக சூடு பிடிக்கவில்லை. சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த தொழிலையே நம்பி வாழ்ந்து வருகிறோம். பிளாஸ்டிக் பொருட்களால் உடுக்கை, டிரம்ஸ் போன்ற பல்வேறு வடிவங்களிலும், நிறங்களிலும் மேளம் விற்பனை செய்யப்படு கின்றன. ஆனால் பாரம்பரியமாக போகிப் பண்டிகையை கொண்டாடுவோர் இங்கு தயா ரிக்கப்படும் போகி மேளத்தை தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். இது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையை சேர்ந்தது. இது சீசன் தொழில் என்பதால் மேளம் செய்வதற்கான தோலை சென்னையில் இருந்து மே மாதம் வாங்கி பதப்படுத்தி வைத்து மேளம் செய்வோம். ஆனால் 2020இல் தொடர் பொதுமுடக்கம் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து இதுவரை தொழில் செய்வது கடின மாக உள்ளது. அந்த நேரத்தில் தோல்களை வாங்க போக்குவரத்தின்றி பெரும் அவதிக் குள்ளாகி காலம் தாழ்த்தி தளர்வுக்கு பிறகே தோல் வாங்கி வந்து மேளம் செய்து காய வைக்கவும், நிவர் புயல் மற்றும் பெருமழை வந்ததால் காய வைக்கவே சிரமத்திற்குள் ளானோம். மேளங்கள் காயவைக்க முடியா மல் 4இல் ஒருபங்கு மேளம் பயன்படுத்த முடி யாத அளவிற்கு சேதமடைந்தது. அதனால் எங்களுக்கு அந்த ஆண்டு பெரும் நஷ்டம் தான் ஏற்பட்டது. 2021 இல் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் மேளம் தயாரிக்கும் பணி முடங்கியது. இருந்த போதி லும் வாழ்வாதாரத்திற்காக போகி மேளம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேக ரித்து போகி மேளம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சென்னையில் இருந்து மொத்தமாக விற்பனைக்கு வாங்க வரும் வாடிக்கையாளர்களும் எதிர்பார்த்த அள விற்கு வரவில்லை. ஒரு மேளம் 23 ரூபாய்க்கு வியாபாரிகளுக்கு விற்கிறோம். அவர்கள் ரூ.40 முதல் ரூ, 50 வரை விற்பனை செய் கின்றனர். ஆண்டுதோறும் இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மேளங்கள் செய்வார்கள். இந்த ஆண்டு குறைந்த அளவிற்கே தயார் செய் துள்ளோம். அதை வாங்குவதற்கு வியாபாரி கள் வரவில்லை என வேதனையுடன் தெரி வித்தார். மேலும் இத்தொழிலை பாதுகாக்க அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அதன்மூலம் நலிவுற்ற நிலையில் உள்ள எங்கள் வாழ்வாதாரம் ஓரளவு மேம்படும் என்றார்.