ஈரோடு, செப்.28- வரி செலுத்தவில்லையெனில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால், தண்ணீரே வராமல் எப்படி வரி கட்டுவது என மக்கள் கேட்பதாக ஈரோடு மாமன்ற கூட்டத் தில் கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் புதனன்று நடைபெற்றது. மேயர் சு.நாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆணையர் ஜானகி, துணை மேயர் செல்வராஜ் மற்றும் மண்டல தலை வர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாமன்ற உறுப் பினர்கள் பேசுகையில், கவுன்சிலர்கள் சொல் வதை அதிகாரிகள் கேட்பதே இல்லை. வீட்டு வரி பிரச்சனையை தீர்க்க 2 மாதமானது. பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல் படவில்லை. உங்களுக்கு ஓட்டு போட்டு என்ன வேலை செய்தீர்கள் என மக்கள் கேட்கின்றனர். கனி மார்க்கெட் பிரச்சனை ஒன்றரை ஆண்டுகளாக உள்ளது. அவ்வளவு அழகாக கட்டடம் கட்டிவிட்டு, எதற்கு வெளி யில் கடை போட அனுமதிக்கிறீர்கள்? கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊராட்சிக்கோட்டை குடிநீர் கிடைப்பதில்லை. வரி பாக்கி என நோட்டீஸ் வழங்கப்படுகிறது. செலுத்தவில்லை யெனில் இணைப்பை துண்டிப்போம் என மிரட்டப்படுகிறது. தண்ணீரே வராமல் எப்படி வரி கட்டுவது என்று மக்கள் கேட்கிறார்கள். மக் களுக்கு என்ன பதில் சொல்வது, என கவுன் சிலர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி னர். இதற்குப் பதிலளித்து ஆணையர் ஜானகி பேசுகையில், பொது நிதியில் செய்த வேலை களுக்கு ரூ.12 கோடி கொடுக்க வேண்டிய பாக்கி உள்ளது. அதனால் அதனைக் கொடுத்து விட்டுத்தான் அடுத்த வேலைகளைச் செய்ய முடியும், என்றார். இதைத்தொடர்ந்து அவசர கூட்டம் தொடங் கிய போது கவுன்சிலர் நந்தகோபு பேசுகை யில், மாநகராட்சி பகுதி முழுமைக்கு ஊராட்சி கோட்டையிலிருந்து ரூ.484.45 கோடி செல வில் தனிக்குடிநீர் திட்டம் துவங்க கடந்த 2016 ஆம் ஆண்டு அனுமதியளிக்கப்பட்டது. பணி கள் மேற்கொள்ளப்பட்டு, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 8 ஆண்டு களில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள், மேற்படி திட்டத்தில் விடுபட்ட பகுதி களாகும். அவற்றிற்கு ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மன்றத்தின் ஒப்பு தல் கோரப்பட்டது. ஆனால் 31, 32, 33, 47, 48 ஆவது வார்டுகளுக்கு ஊராட்சிக்கோட்டை குடிநீர் வரவில்லை. அப்பகுதிகளுக்கு தண் ணீர் எப்போது வரும். அதன் பிறகு இத் திட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ளலாம், என் றார். மேலும், கடந்த ஒரு வருடமாக தண்ணீர் கொடுங்கள் எனக்கேட்டு வருகிறோம் என கவுன்சிலர்கள் தெரிவித்தனர். அப்போது குறுக் கிட்ட ஆணையாளர், குறிப்பிட்ட பகுதிக ளுக்கு குடிநீர் வழங்கும் தொட்டிகளில் தண் ணீர் ஏற்றப்பட்டுள்ளது. விநியோகத்தில் பிரச் சனை உள்ளது. ஊராட்சிக்கோட்டை திட்டம் இன்னும் முடியவில்லை. மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை, என்றார். மேலும், ஏற்கனவே இருக்கும் பகுதிகளுக்கே தண் ணீர் கொடுக்க முடியவில்லை. விடுபட்ட பகுதிகளுக்கு எப்படி தண்ணீர் கொடுப்பீர் கள்? என்ற கேள்வியை பலரும் எழுப்பினர். இதனால், மாமன்ற கூட்டத்தில் பெரும் சல சலப்பு ஏற்பட்டது.