திருப்பூர், ஜூலை 24- திருப்பூரில் வாடகை வீடுகளில் குடியிருக் கும் பனியன் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அனைவருக் கும் வீடு திட்டத்தில் வீடு வழங்க வலியுறுத்தி ஏஐடி யுசி பனியன் தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சி யரகத்தில் மனு அளித்தனர். திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏஐடியுசி பனியன் தொழிற்சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட் டது. அதில், ஒன்றிய மற்றும் மாநில அரசு கள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத் தில் திருப்பூரில் உள்ள பனியன் தொழிலா ளர்களில் வாடகை வீடுகளில் குடியிருப்போ ருக்கு வீடு வழங்க வேண்டும் என்று கோரினர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட னர். ஏஐடியுசி சார்பில் எம்.ரவி, பி.ஆர்.நடராஜன், எம்.மோகன், என்.சேகர், கவுன்சிலர்கள் அரு ணாசலம், எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோர் பங் கேற்றனர். திருப்பூர் கோல்டன் நகர் மற்றும் வீர பாண்டி பிரிவு பகுதிகளில் இருந்து மக்கள் விண் ணப்பங்களுடன் திரண்டு வந்திருந்தனர். தார்ச்சாலை அமைக்க கோரிக்கை அவிநாசி ஒன்றியம் சேவூர் அம்பேத்கார் நகர் முதல் பந்தம்பாளையம் ஆதிதிராவிடர் காலனி வரை செல்லும் இணைப்புச் சாலையை தார்ச் சாலையாக மாற்றி தருமாறு அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. குறிப் பாக இந்த சாலை அம்பேத்கர் நகர் மயானத் திற்கு செல்லும் பாதையாகவும், பந்தம்பா ளையம் மக்களுக்கு முக்கிய போக்குவரத்து சாலையாகவும் உள்ளது. இங்கு தார்ச்சாலை அமைப்பதற்கு கடந்த ஜூன் முதல் வாரத்தில் அடிக் கல் நாட்டப்பட்டது. எனினும் கிராம ஆவணங் கள் அடிப்படையில் சாலைக்கான நில அளவை செய்த பொழுது இந்த வழியில் இருக்கும் தனி நபர்கள் இருவர் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். நில அளவை பணிக்கு இடையூறு செய்கின்றனர். நான்கு முறை நில அளவை செய்தும் முழுமையாக அளவைப் பணி முடிக்கப்படவில்லை. எனவே தனியார் ஆக்கிரமிப்பை அகற்றி உடனடியாக தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
மின் பணியை விரைவுபடுத்த கோரிக்கை
திருப்பூர் மாநகராட்சி, 11ஆவது வார்டுக்கு உட்பட்ட திலகர் நகர் முதல் ஆத்துப்பாளையம் மின் பகிர்மான அலுவலகம் வரை மின் கம்பி வடம் அமைக்கும் வேலை நடைபெற்று வருகி றது. இப்பணியை எடுத்துள்ள ஒப்பந்ததாரர் போதிய ஆட்கள் இல்லாமல் வேலையை மிக வும் தாமதம் செய்து வருவதுடன், குடிநீர் குழாய் களையும் உடைத்து வருகின்றனர். பொதுமக்க ளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. எனவே, மின்வாரிய அலுவலகத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து உடைக்கப்பட்ட குழாய்களையும் சரி செய்து பணியை முழுமை யாக நிறைவேற்ற வேண்டும் என்று மாநகராட்சி 11 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.செல்வராஜ் கோரிக்கை என அளித்துள்ளார். டாஸ்மாக் மதுக்கடையை மூடுக! திருப்பூர், கொங்கு மெயின் ரோடு ரங்கநாத புரம் மூன்றாவது வீதியில் அரசு டாஸ்மாக் மது பான கடை எண் 1909 பல ஆண்டு காலமாக செயல் பட்டு வருகிறது. இப்பகுதியில் 500க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மதுபான கடையும், மதுபான கூடம் அருகில் இருப்பதால் குடிபோதையில் பலர் வீதிகளில் இருசக்கர வாக னத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அத்துடன் குடிபோதையில் நா கூசும் வார்த்தைகளைப் பேசி தகராறு செய்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்ற னர். எனவே இந்த மதுபான கடையையும், மது பான பாரையும் இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சார்பாக பலமுறை ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முதல் கட்டமாக 500 மதுபான கடைகளை மூடும்போது இந்த கடையும் மூடப் படும் என்று உறுதி அளிக்கப்பட்டது கடைசி நேரத்தில் என்ன காரணத்தினாலோ இந்த கடை மூடப்படவில்லை, தொடர்ந்து செயல்பட்டு வரு வதால் இப்பகுதி மக்கள் மிகப் பெரிய அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் அருகிலேயே இஎஸ்ஐ மருத்துவம னையும் செயல்பட்டு வருகிறது. மருத்துவம னைக்கு வரக்கூடிய நோயாளிகள், முதியோர் குடிகாரர்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த மதுபான கடையை உடனடியாக இங்கி ருந்து அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற் படும் என்று இப்பகுதி மக்கள் மனு அளித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மண்டல குழுச்செயலாளர் சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாநகர் மாவட்ட செய லாளர் எஸ் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மதுபான கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
தீக்குளிக்க முயற்சி
திருப்பூர் அருகே ஊத்துக்குளி வட்டம், ச. பெரியபாளையத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி சுமதி. இவர்களது கைக்குழந் தையுடன் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டத் திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த னர். ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் திடீ ரென தனது குழந்தைக்கு தனக்கும் மண்ணெண் ணெய் ஊற்றிக் கொண்டு இவர்கள் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த காவலர்கள் உடனடி யாக அவரையும், அவரது குடும்பத்தாரையும் தனியாக அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் வீடு இருக்கும் பகுதியில் நடைபாதையை அருகாமையில் இருப்பவர் ஆக்கிரமித்து கால்நடைகளை கட்டி தொந்தரவு செய்து வருவதாகவும், இதனால் தன் குழந் தைக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வலிப்பு நோய் தாக்குவதாகவும் தெரிவித்தார். தனது வீட்டிற்கான பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சுத்தம் செய்து தரும்படியும், தனது குழந் தைக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் பலமுறை கோரிக்கை மனு அளித் தும், அரசு நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனவிரக்தி அடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தாக தெரிவித்தார். அதேபோல் காது கேளாதோர், வாய் பேசா தோர் சங்கத்தைச் சேர்ந்தோர் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் உரிமைக்கான சங்கத்தின் சார்பில், தங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இதில் மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.ஜெய பால், மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போன்று, மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மாவட்டத்தின் பல பகுதி களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.