வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வியாழனன்று ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில், புதிய பேருந்துகளின் இயக்கத்தினை, கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.