districts

img

சுட்டெரிக்கும் வெயில்: மருத்துவரின் அறிவுரை!

சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரண்டு தினங்களாக 106 டிகிரி அளவிற்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் வெப்ப காற்றை வாங்கி சிரமப் பட்டு வரும் நிலையில், மருத்துவர் கள் தங்களின் மேலான ஆலோச னைகளை வழங்கி வருகின்றனர். சூரியன் இயற்கை கிருமி நாசினி என மருத்துவரால் கூறப்பட்டா லும், குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு மேல் சூரிய ஒளி கதிர்கள் மனிதர் உடம்பில் படும்போது எண்ணற்ற பின் விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக, சூரிய ஒளி கதிரின் வெப்பம் 38,  39 டிகிரி செல்சியஸ் வரை மனிதர் களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அதற்கு மேல் சூரிய ஒளிக்கதிர்கள்  மனிதர்கள் மீது படும்போது, எண்ணற்ற தோல் நோய்கள் உரு வாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களாக சேலம் உள் ளிட்ட கொங்கு மண்டல பகுதிக ளில் வெப்பம் அதிகரித்து வருவது  அனைவரும் அறிந்ததே. அதிலி ருந்து பொதுமக்கள் தங்களை பாது காத்துக் கொள்ள சேலம் அரசு  மோகன் குமாரமங்கலம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை இணை பேராசிரியர் பாலாஜி அறி வுரை கூறியுள்ளார். இதில், சாதாரண நாட்களில் மனிதர்கள் ஒருமுறை குளிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். தற்போது வெப்பத்தின் காரணமாக இரண்டு, மூன்று முறை குளிப்பது  கட்டாயம். வியர்வை அதிகம் சுரக் கப்படுவதால் அழுக்கு சேர்ந்து  வேர்க்குரு உள்ளிட்ட சரும பிரச் சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை முடியை அதிகமாக வைத்தி ருக்க வேண்டாம். வெயில் காலத் தில் “சம்மர் கட்டிங்” மற்றும் முடி  இல்லாத தலையாக வைத்திருப் பது நல்லது. தலைமுடிக்கு குளிர்ச் சியான எண்ணெயை கண்டிப்பாக  தேய்ப்பதன் மூலம், கொப்பளங்க ளில் இருந்து பாதுகாக்க முடியும். இளம் வயதினருக்கு வரும் முகப் பரு பிரச்சனை வெயில் காலத்தில் அதிகமாக இருக்கும். அம்மை நோய் உள்ளிட்ட சரும நோய்கள் அதிகளவில் வெயில் காலங்களில் வரும். அதிகப்படியான சூரிய கதிர்கள் தோளில் மீது பட்டு வெண்புண் உள்ளிட்ட பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் மருத் துவர்கள் தெரிவித்துள்ளனர். பண்டைய காலத்தில் வெயிலை சமாளிக்க மரம் முக் கிய காரணமாக இருந்தது. இன் றைய காலகட்டத்தில் மரத்தை வெட்டி, வனப்பகுதியை அழித்து  குடியிருப்பு பகுதிகளாக மாற்றப் பட்டு வருகிறது. மரங்களை வெட்டுவதாலே வெப்பத்தின் சத வீதம் உயர்வுக்கு அதிக காரண மாகும். எனவே, மரங்களை வளர்க்க மக்கள் முன் வர வேண் டும். வெயில் அதிகரிக்கும் போது  உடலில் உள்ள நீர் வியர்வை மூலம்  வெளியேறுவது அனைவருக்கும் தெரியும். உடல் வெப்பத்தை போக்க குளிர்ச்சியான பொருட் களை அருந்த வேண்டும். பானை தண்ணீரை குடிப்பது வெயில் காலத்திற்கு உகந்தது. அதேபோல் குளிர்சாதன பெட்டியில் உள்ள  குளிர்பானங்களை கண்டிப்பாக அருந்துவது தவிர்க்கப்பட வேண் டும். உடலில் வெப்பநிலையை அது இன்னும் அதிகரிக்கும். எனவே,  குளிர்சாதன பெட்டிகளில் உள்ள குளிர்பானங்கள் மற்றும் நீரை பயன்படுத்த வேண்டாம். உடலில் உள்ள நீர் ஆவியாகா மல் இருக்க உடலுக்கு எண்ணெய் தேய்ப்பது நல்லது. தலை முடியில் எண்ணெய் பதம் காயாமல் இருக்கும் அளவிற்கு எண்ணெய் தேய்ப்பது அவசியம். எண்ணெய் தேய்ப்பதால் தலைவலி உள் ளிட்ட வெப்பத்தால் வரும் வியாதி கள் தடுக்கப்படும். நாம் பயன்ப டுத்தும் அனைத்து சோப்பு கட்டிக ளும் கெமிக்கல் கலந்தே வருகி றது. உடலில் உள்ள தோல்களின் தன்மைக்கு ஏற்ற வகையில் சோப்பு கட்டிகளை பயன்படுத்த வேண்டும். கிளிசரின் கலந்த சோப்பு பயன்படுத்துவது நல்லது.  வெயில் காலங்களில் உடலுக்கு நீர் ஆதாரத்தை தரும் காய்கள் மற் றும் பழங்களை உண்ண வேண் டும். குறிப்பாக சுரைக்காய், புடலங் காய், சௌசௌ உள்ளிட்ட நீர்  காய்களையும், தர்பூசணி, முலாம்ப ழம், இளநீர், நுங்கு உள்ளிட்ட உட லுக்கு குளிர்ச்சி தரும் பழங்களை யும் உண்பது உடலில் உள்ள நீர்  தன்மையை பாதுகாத்து வெயிலின்  வெப்ப சலனத்தை எதிர்த்து நமது  உடலை பாதுகாக்கும். மேலும்,  உடலுக்கு தீமை விளைவிக்கக் கூடிய துரித உணவு வகைகளை முற்றுறிலும் தவிர்க்க வேண்டும். -தொகுப்பு: எழில்

இந்தியாவிலேயே அதிக வெப்பம் – ஈரோடு 3வது இடம்

இந்தியாவில் பல்வேறு இடங் களில் வெப்ப அலை வீசி வருகி றது. ஏப்ரல் மாதம் தொடங்கி யதில் இருந்து வெயிலின் தாக் கம் மேலும் அதிகரித்தது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத் தப்பட்டனர். தமிழகத்தில் கோடை வெயி லின் தாக்கம் இயல்பை விட 2  டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுத லாக இருக்கும் என வானிலை  ஆய்வு மையம் தெரிவித்திருந் தது. இதன்படி கடந்த 19 ஆம் தேதி யன்று  ஈரோட்டில் புதிய உச்ச மாக 109 டிகிரி வெயில் கொளுத் தியது. இதைத்தொடர்ந்து திங்க ளன்று 2 ஆவது முறையாக ஈரோட்டில் 109.04 பாரன் ஹீட்  வெப்பம் பதிவானதாக வானிலை  ஆய்வு மையம் தகவல் தெரி வித்துள்ளது. இந்நிலையில் அதி கபட்ச வெப்பநிலையில் இந்தியா விலேயே 3 வது இடத்தை ஈரோடு  பிடித்துள்ளது. மேலும் திங்க ளன்று ஒடிசா மாநிலம் புவனேஸ் வர் மற்றும் ஆந்திர மாநிலம்  கடப்பாவில் 110.84 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் பதிவாகி முதல் 2 இடத்தை பிடித்துள்ளது.