districts

img

உதகையில் கோடை சீசனையொட்டி, இன்று குதிரை பந்தயம் துவக்கம்

உதகை, ஏப்.13- கோடை சீசனை யொட்டி, உதகையில் நடத் தப்படும் குதிரை பந்தயம் வியாழனன்று (இன்று) துவங்குகிறது. கோடை சீசனின் போது நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணி களை கவர பல்வேறு நிகழ்ச் சிகள் நடத்தப்பட்டு வருகின் றன. இதன் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று தொடங்கி ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ்  கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயங் கள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு 135 ஆவது குதிரை பந்தயம் வியாழனன்று (இன்று) துவங்கி, ஜூன் 10 ஆம் தேதி வரை இரண்டு மாதங்கள் நடக்கின்றன. இதற்காக பெங்களூர், சென்னை, பூனே உட்பட பல் வேறு மாநிலங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் வரவழைக்கப் பட்டுள்ளன. முக்கிய பந்தயங்களான ‘நீல கிரி டர்பி’ மே 15 ஆம் தேதியும், டாக்டர் எம்ஏஎம் ராமசாமி நினைவு கோப்பை மே 14 ஆம் தேதியும், ‘நீலகிரி தங்க கோப்பை’ போட்டி ஜூன் 2 ஆம் தேதியும், ‘ஊட்டி ஜூவைனல் ஸ்பிரின்ட் கோப்பை’ ஜூன் 3 ஆம் தேதியும் நடைபெறுகின்றன. இது குறித்து மெட்ராஸ் ரேஸ் கிளப் செயலாளர் எஸ்.நிர்மல் பிரசாத் கூறுகை யில், ஆண்டுதோறும் மெட்ராஸ் ரேஸ் கிளப்  சார்பில் உதகையில் குதிரை பந்தயங்கள்  நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியில், 600 குதிரைகள், 29 குதிரை பயிற்சியாளர் கள் மற்றும் 39 ஜாக்கிகள் கலந்துக் கொள் கின்றனர். இந்தாண்டு மொத்தம் 18 நாட் களில் 114 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்காக கோப்பைகள் மற்றும் பரிசு  தொகையாக ரூ.5.35 கோடி அறிவிக்கப்பட் டுள்ளது. மொத்தம் 18 நாட்கள் பந்தயங்கள் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பந்தயங்கள் நடைபெற உள் ளது, என்றார்.