உதகை, டிச.15- உலகில் பாலுக்கு அடுத்த படி யாக அதிகமாக கலப்படம் செய் யப்படும் பொருள் என்றால் அது தேன் தான் என வேளாண்மை அறி வியல் நிலைய திட்ட ஒருங்கிணைப் பாளர் ராஜா பேசினார். தமிழ்நாடு வேளாண்மை பல் கலைகழகம், நீலகிரி மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தேசிய தேனீ வாரியம் இணைந்து நடத்தும் மாவட்ட அள விலான தேனீ வளர்ப்பு கருத்தரங் கம் உதகை சேரிங்கிராஸ் பகுதி யில் உள்ள தோட்டக்கலை வளாக அரங்கில் அண்மையில் நடைபெற் றது. இந்நிகழ்வில், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங் கிணைப்பாளர் ராஜா பேசுகையில், தேனீ வளர்ப்பு நமக்கு இரு வகை யான நன்மைகளை தர கூடியது. முதலாவது தேனீ வளர்ப்பை நாம் ஒரு தொழிலாக செய்யலாம். தேனீ வளர்ப்பின் மூலம் விவசாயத்தை அதிகப்படுத்த முடியும். 130 வித மான பயிர்களில் தேனீயின் மகரந்த சேர்க்கையின் மூலம் விளைச்சல் அதிகரிக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேனீ வளர்ப்பின் மூலம் ஏற்படும் மகரந்த சேர்க்கை யின் மூலம் அதிகமான மகசூலை கொடுக்கிறது. இதன் மூலம் தேன் மூலமாக வருவாய் ஈட்டுவதற்காக வும், பயிர் விளைச்சலை அதிகரிக் கும் மகரந்த சேர்க்கைக்காகவும் என இரு வகை நன்மை கிடைக்கி றது. அதேநேரத்தில், உலகில் பாலுக்கு அடுத்த படியாக அதிக மாக கலப்படம் செய்யப்படும் பொருள் என்றால் அது தேன் தான். பார்த்த உடன் நல்ல தேனா என் பதை கண்டறிய முடியாது. என் எம்ஆர் எனப்படும் ஆய்வின் மூலம் தேனை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அதன் சர்க்கரை அளவை கண்டறிந்து, அது உண்மையான தேனா, கலப்பட தேனா என கண்ட றிய முடியும். தேனீ வளர்ப்பினை முறையாக மேற்கொண்டால் மட் டுமே தரமான தேனை உற்பத்தி செய்ய முடியும் என்றார். தொடர்ந்து தோட்டக்கலை துணை இயக்குநர் பேசுகையில், தேனீ வளர்ப்பு என்பது ஒரு கலை. வடமாநிலங்களில் தேன் உற்பத்தி அதிகளவு மேற்கொள்ளப்படுகி றது. 2 ஆயிரம் தேனீ வகைகள் இருந்தாலும், தேன் உற்பத்திக்கு 7 வகையான தேனீக்கள் தான் உள் ளன. 12700 விவசாயிகள் தேனீ வாரி யத்தில் பதிவு செய்து தேனீ வளர்ப்பை சிறப்பாக செய்து வரு கின்றனர். தோட்டக்கலைத்துறை மூலம் 20 ஆண்டுகளாக தேனீ வளர்ப்பிற்கு விவசாயிகளுக்கு தேவையான அனைத்தும் செய்து தந்து ஊக்கப்படுத்தி அதிகப்ப டுத்தி உள்ளோம். இந்தியாவில், தேனீவளர்ப்பு மூலம் 2.3 பில்லி யன் வருமானம் ஈட்டி தரும் தொழி லாக தேனீ வளர்ப்பு உள்ளது. இந்தியாவில் 1 லட்சத்து 33 ஆயி ரத்து 200 டன் தேன் உற்பத்தி செய் யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண் டம் தேன் உலக புகழ்பெற்றது. ஏற்று மதியும் செய்யப்படுகிறது. 100 கிராம் தேனீல் 1272 கலோரி உள் ளது என்றார். இந்நிகழ்வில், தேனீ வளர்ப்பு கருத்தரங்கம் தொடர்பான புத்த கம் வெளியிடப்பட்டது. இதில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் கவிதா, கோவை இயற்கை தேனீ பண்ணை ஆனந்த், வேளாண்மை விரிவாக்க இணை பேராசிரியர் ஜெய்ஸ்ரீதர் மற்றும் 100க்கும் மேற் பட்ட விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.