திருப்பூர், நவ.8 - இந்திய ஒருமைபாட்டிற்கு எதிரான ஒன் றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திங்க ளன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்திய மாணவர் சங்கம் தமிழக முழுவ தும் இந்தி திணைப்பை கண்டித்து ஆர்ப்பாட் டம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்தது. இதைத்தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத் தின் சார்பில் திருப்பூர் மாவட்டம், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் கிளை செயலாளர் சபரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் மாவட்ட செயலாளர் சம்சீர் அக மது, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ண குமார், சுஜிதா, கல்லூரி கிளை உறுப்பி னர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பி னர். அவிநாசி அவிநாசி அரசு பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தாலுக்கா துணை செயலா ளர் ஆகாஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் பிரவீன் குமார், மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுஜிதா மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.