மலைவாழ் மக்கள் தொடர்பு முகாம்
உடுமலை, ஏப்.18- உடுமலை கோட்டத்தில், மலைவாழ் மக்கள் தொடர்பு முகாம் செவ்வாயன்று சின்னார் மலைவாழ் மக்கள் குடியி ருப்பு பகுதியில், வருவாய்த் துறை சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய மின்னணு, குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, ஆதார் அட்டை, பிறப்பு - இறப்பு சான்று, மருத்துவ முகாம், வனத்துறை சார்பில் காட்டுத்தீ கட்டுப்படுத்துவது, ஆதார் என்னுடன் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பது ஆகியவை நடைபெற்றது. இம்முகாம்களில், உடுமலை வட்டாட்சியர் கண்ணாமணி, சமூக பாதுகாப்பு திட்டம் வட்டாட்சியர் விவேகானந்தன், குடி மைப் பொருள் வட்டாட்சியர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியம் , கேபிள் டிவி வட்டாட்சியர் ரவீந்தி ரன், எரிசனம்பட்டி மருத்துவ அலுவலர் உமா ராணி, வனத் துறை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
21 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
உடுமலை, ஏப்.18- உடுமலை கோட்டாட் சியர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் 21 ஆம் தேதி வெள் ளிக்கிழமை காலை 11 மணிக்கு வருவாய் கோட் டாட்சியர் ஜஸ்வந்த் கண் ணன் தலைமையில் நடை பெறும். இதில், அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
சரவணபுரம் அரசு பள்ளி சுற்றுச் சுவர் கட்டுவதற்கு நில அளவை செய்யத் தாமதிப்பதாக புகார்
திருப்பூர், ஏப். 18 - அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவ தற்கு நில அளவையாளர் நிலத்தை அளந்து கொடுக்காமல் தாமதம் செய்வதாக அப்ப பள்ளி பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட் டம், நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, பல்ல கவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் சரவணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு, நில அளவையாளர் பள்ளி நிலத்தை அளந்து தராமல் காலதாமதம் செய்வதாக அப்பள்ளியின் பெற்றோர் ஆசி ரியர் சங்கத்தினர் புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து சரவணபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தின் தலைவர் என்.கருப்புசாமி, துணைத் தலைவர் ஏ. தென்னரசு, பொருளாளர் வி. காமராஜ் ஆகியோர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை, திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வாராந்திர குறைதீர் கூட்டத் தில் வி.காமராஜ் அளித்தார். இதில் சரவணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு நிலத்தை அளந்து கொடுக்க தாமதம் செய்வதால் மேற் படி கட்டுமான பணி தொடங்கப்படாமல் உள் ளது. எதிர்வரும் மழைக்காலத்தை கவனத் தில் கொண்டு கட்டுமானப் பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளதால் நில அளவையாளர் சர வண புரம் அரசு மேல்நிலைப்பள்ளி நிலத்தை அளந்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற் றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொண்டனர்.
ரூ.11 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
ரூ.11 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் அவிநாசி, ஏப்.18- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்களன்று நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.11 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் 520 மூட்டை நிலக்கடலை கொண்டு வந்திருந்தனர். குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,500 முதல் ரூ.7,600 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,750 முதல் ரூ.7,500 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ 6,750 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 இலட்சத்துக்கு ஏலம் நடைபெற் றது.
அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் தேர்ச்சி
அவிநாசி, ஏப்.18- மாநில அளவிலான திறனாய்வு தேர்வில் பெருமாநல்லூர் அருகே உள்ள அப்பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி மாணவ, மாணவிகள் 3 பேர் தேர்ச்சி பெற்றுள் ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு போட்டி தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் அப்பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் ரீனா, தர்ஷினி, மாணவன் கரிகாலச் சோழன் ஆகிய 3 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ. 48 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டுத் தெரிவித்தனர்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:28.69/60அடி நீர்வரத்து:474கன அடி
வெளியேற்றம்:705கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்:54.60/90அடி.நீர்வரத்து:கனஅடி
வெளியேற்றம்:15கன அடி
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தரகர் தலையீட்டை தடுக்க சிஐடியு வலியுறுத்தல்
உடுமலை, ஏப்.18- உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டு நர் உரிமம் முதல் வாகன பரிசோதனை வரை தரகர்கள் தலை யீடு உள்ளது. இதை தடுக்க வலியுறுத்தி சிஐடியு மோட்டர் மற் றும் ஆட்டோ சங்கத்தினர் வட்டார போக்குவரத்து அலுவ லகத்தில் செவ்வாயன்று மனு அளித்தனர். சிஐடியு சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலக்தில் எந்த வேலைக்கும் தரகர் இல்லாமல் நேராக செல்ல முடிவது இல்லை. மேலும் அலுவலகத்திற்கு சம்பந்தம் இல்லாத நபர் கள் தான் அனைத்து துறைகளிலும் அதிகாரம் செய்கிறார்கள். வாகனங்களை புதுப்பிக்க பணம் தர மறுபவர்களை கால தாமதத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுபோல் முறை தவறி நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை நகரில் மூணார் மற்றும் மறையூர் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதை கட்டுப்படுத்த வேண்டும். தன் சொந்த பயன்பாட்டிற்கு இருக்கும் வாகனங்களை சுற்றுலா செல்ல பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிஐடியு ஆட்டோ மற்றும் மோட்டார் சங்கத்தின் தலைவர் தண்டபாணி தலைமையில், விவசாய சங்க மாவட்ட தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன், சிஐடியு நிர்வாகிகள் ஜஹாங் கீர், யோசுராஜ் ஆகியோர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமாரிடம் மனு அளித்தனர். மேலும், இந்த கோரிக் கைகள் படி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தரகர் ஆதிக்கத்தை தடுக்க வில்லை என்றால், அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று சிஐடியு நிர் வாகிகள் தெரிவித்தார்கள்.
தென்னை சார் தொழில் பாதிப்பு தமிழ்நாடு அரசு மீட்டெடுக்குமா?
பொள்ளாச்சி, ஏப்.18- தென்னை சார் தொழிலில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வருகிற நிலையில், இத் தொழில் நலிவடைந்து முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.தமிழ்நாடு அரசு இதனை மீட்டெடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இதுகுறித்து இத்தொழிலில் ஈடுபட் டுள்ளவர்கள் கூறுகையில், விவசாயம் சார்ந்த தொழில் எந்தவித மாசும் ஏற்படுத் தாத இத்தொழில் இயற்கையானது. காயர் தொழில் உற்பத்தி பொருட் களான மஞ்சி, கயிறு மற்றும் பித் ப்ளாக்ஸ் எனப்படும் தென்னை நார் மற்றும் நார்த்தூள்களில் மெத்தை, கைவினைப் பொருட்கள் தயாரிப் பதற்கும், விளையாட்டு மைதானம், பூங்காக்கள் மற்றும் வேளாண் பண்ணைகளுக்கு உரமாகவும் பயன் படுத்தப்படுகின்றன. மேலும், பசுமைக் குடிலில் மண்ணின்றி காயர் பித்தை கொண்டு விவசாயம் செய்யவும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக் கவும் அதிகளவில் உற்பத்தி செய்யப் படுகின்றன. மட்டையில் இருந்து, 40 சதவிகித நார்களை எடுக்கப்படுகிறது. தென்னை நாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க முடியும். மட்டையில் மீதம் உள்ள 60 சதவிகிதம் துகளைத்தான், காயர் பித் எனக் கூறுவார்கள்.
அதை நன்றாகக் கழுவி, கட்டியாக்கி ஹை ஈசி, லோ ஈசி என இரண்டு வகையாகப் பிரித்து ஏற்றுமதி செய்கின்றனர். காயர் பித் 8 மடங்கு அதிகம் தண்ணீரை உறிஞ்சும் தன்மையைக் கொண்டது. ஒரு கிலோ பித்தில் 30 லிட்டர் தண்ணீர் இருக்கும். தென்னை நார் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளதாக வேதனை தெரிவித்தனர். தமிழ்நாடு தென்னை சார் தொழில் கூட்டமைப்பின் தலைவர் வி.பால குருசாமி கூறுகையில், கொரோனா பரவல் முடிந்து தொழில் மீண்டு வந்த நிலையில், வெளிநாடுகளுக்கு தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் கன்டெய்னர், கப்பல் வாடகை 1,500 டாலரில் இருந்து 10 ஆயிரம் டாலராக உயர்ந்து விட்டது. இது தவிர தென்னை நார் பொருட்கள் விலையும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால், தென்னை நார் ஏற்றுமதி குறைந்து விட்டது. மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெள்ளை நிற பட்டியலில் இருந்த தென்னை நார் தொழிலை ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றி விட்டது. இதனால் தென்னை நார் தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதாக பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. தென்னை நார் இயற்கையான பொருட் களை கொண்டதுதான், அதில் வேதிப் பொருட்களை சேர்ப்பதில்லை. அதை மறுபரிசிலனை செய்ய வேண்டும். நாங்கள் சிறுகுறு தொழில் செய்வதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த ஆரஞ்சு நிறத்திற்கு மாற முடியாத சூழ் நிலை உள்ளது. எங்களுக்கு ஆரஞ்சு திறத்தில் இருந்து ஏற்கனவே உள்ள வெள்ளை நிறத்திற்கு மாற்றிக் தர வேண்டும். 10 லட்சம் தொழிலாளர் களுக்கு வேலைவாய்ப்பு தந்த இத் தொழில் மறுபடியும் புத்துயிர் பெற தமிழ்நாடு அரசு இதற்கென வாரியம் அமைத்து, இந்தொழில் சிறக்க உதவிட வேண்டும். மேலும், தொழிற்சாலைக் கான மின் காப்பு கட்டணத் தொகை பல மடங்கு உயர்ந்துள்ளதால் அதை திரும்ப பெற வேண்டும் (112 K W க்கு ரூ4,200 லிருந்து ரூ.17,000 ஆக உயர்த்தி யுள்ளனர்). மின்சார கட்டணம் உயர்ந் துள்ளதால், மேலும், உற்பத்தி செலவு உயர்ந்துள்ளது. தொழிற்சாலைகள் இயங்காததால் வங்கி கடன் திரும்ப செலுத்தாமல் வரா கடன் ஆகிவிட்டது. வங்கிகளும் கடன் தொகை திரும்ப செலுத்த நெருக்கடி தருவதால் இதி லிருந்து நாங்கள் விடுபட அரசாங்கம் உதவிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 7500 மட்டை மில் தொழிற்சாலைகள் உள்ளன. இதில், ஏறத்தாழ 6000 தொழிற்சாலை களை நட்டத்தினால் மூடிவிட்டனர். அர சாங்கத்திற்கு அன்னிய செலாவணி சுமார் ரூ.5,000 கோடி ஈட்டி தரும் இத் தொழிலை நட்டத்தில் இருந்து, தமிழ் நாடு அரசாங்கம் மீட்டுத் தர வேண்டும் என்றார்.