districts

img

வனப்பாதுகாப்பு திருத்தச் சட்டத்தை கைவிடக்கோரி உடுமலையில் மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஜூன் 27 - வனப்பாதுகாப்பு திருத்தச் சட்டத் தைக் கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில்  உடுமலை கோட்டாட்சியர் அலுவலகம்  முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் முடிவுப்படி மாநில அளவில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு  பகுதியாக செவ்வாயன்று இந்த ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் மாநி லத் துணைச்செயலாளர் கோ.செல்வன்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், வன உரிமைச் சட்டம் 2006ஐ  தீவிரமாக அமல்படுத்த வேண்டும். மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நில உரிமை பட்டாக்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநில அரசு  போல் அனைத்து மக்களுக்கும் அரசு செலவில் பாதுகாப்பான வீடுகள் கட்டித் தர வேண்டும். வனப்பாதுகாப்பு திருத்த  சட்டம் 1980 ஐ ஒன்றிய அரசு திரும்ப பெற  வேண்டும். பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கிய துணை திட்ட நிதியை பழங்கு டியின மக்களுக்கே செலவிட வேண் டும். பல ஆண்டு கோரிக்கையான புலை யன் இன மக்களை பழங்குடியினர் பட்டி யலில் சேர்க்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார். மேலும், மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் கே.குப்புசாமி, மாவட்ட பொருளாளர் என்.மணிகண்டன் ஆகி யோர் உரையாற்றினர். இதில் மலை வாழ் மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.