ஈரோடு, டிச.14- ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இணைய தள வசதி வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வருமாறு, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம், மாநிலம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு அதிவேக இணையதள வசதியை ஏற்படுத்தி வருகிறது. கண்ணாடி இழை 85 சத விகிதம் மின்கம்பங்கள் மூலமாக வும், 15 சதவிகிதம் தரை வழியாகவும் இணைக்கப்படுகிறது. அதன்ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொத்த ஊராட்சிகளில் 127 ஊராட்சிகளில் இணைய வசதி வழங் கிட தயார் நிலையில் உள்ளது. இத் திட்டத்திற்கான உபகரணங்கள், ஒவ் வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல் லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை கொண்டு செல்லக்கூடாது என தடை செய்கின்றனர். இத்திட்டம் முழு மையான அரசின் திட்டம். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே, இக்கண்ணாடி இழை ஏற்க னவே நிறுவப்பட்டுள்ள மின்கம்பங் கள் வழியாக கொண்டு செல்ல பொது மக்கள் தடை செய்யக்கூடாது. மேலும், விளைநிலங்களில் உள்ள மின்கம்பங் களின் வழியாக கண்ணாடி இழைகள் இணைக்கப்படும்போது பயிர்க ளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்ப டாது. கண்ணாடி இழையில் எந்த வித மான உலோக பொருட்களும் இல்லை. எனவே, இதனை திருடி சென்று காசாக்கலாம் என தவறான புரிதல் வேண்டாம். இத்திட்டம் முழுமை யாக செயல்பாட்டிற்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் அதி வேக இணையதள வசதிகளை பெற முடியும். ஓவ்வொரு கிராம ஊராட்சி யிலும் கண்ணாடி இழை வலைய மைப்பு உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகளாகும். மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும், கண்ணாடி இழைகளைத் துண்டாக் கும் மற்றும் மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடைசெய்யும் நபர் கள் மீது கடுமையான குற்றவியல் நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.