கோவை, அக்.12- இந்தியாவில் சுற்று பயணம் மேற் கொண்டுள்ள எத்தியோபியா வேளாண்மை துறை அமைச்சர் மெல்லஸ் மெக்கோனென் ஐமர் தலைமையிலான உயர்மட்டக்குழு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டது. உலக வங்கியின் “இந்தியா – எத்தி யோபியா பல்முனை வேளாண் விரி வாக்கம் பற்றிய அறிவு பரி மாற்றம்” என்ற திட்டத்தின் கீழ் எத்தி யோபியா நாட்டிலிருந்து வேளாண்மை துறை அமைச்சர் மெல்லஸ் மெக்கோனென் ஐமர் தலைமையில் உயர்மட்டக்குழு இந்தியாவில் அக்.9 முதல் அக்.15 ஆம் தேதி வரை கல்வி சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவிலுள்ள, அரசு, அரசு சாரா அமைப்புகள், கூட்டுறவு நிறுவ னங்கள் மற்றும் தனியார் நிறுவ னங்கள் மேற்கொள்ளும் வேளாண் விரிவாக்கப் பணிகள் பற்றி அறிந்து கொள்வதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும். இதற்கிடையே இக்குழு கோவையிலுள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திற்கு அக்.9 ஆம் தேதியன்று வருகை தந்தது. அந்த குழுவை தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநர் பி.பொ.முருகன் வரவேற்றார்.
இக்குழுவானது ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டாரத்தில் அமைந்துள்ள அரசு வேளாண்மைத் துறையின் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்திற்கு சென்று, விவசாயிகள் பயன் கருதி மேற்கொள்ளும் விரிவாக்கப் பணி கள் மற்றும் வேளாண் திட்டங்கள், மேலும் அங்கு குழுமியிருந்த விவசா யிகளுடன் உரையாடி, அம்மையம் மேற்கொள்ளும் விரிவாக்கப் பணி களால், எவ்வகையான நன்மை களை அடைந்தனர் என்பது பற்றி தெரிந்து கொண்டனர். இதன்பின், கோபிசெட்டிப் பாளையத்தில் அமைந்துள்ள மைராடா (MYRADA) நிறுவனத்தின் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு சென்று, அங்கு மேற்கொள்ளும் வேளாண் விரிவாக்கப் பணிகள் பற்றி கருத்துக்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மூல மாக தெரிந்து கொண்டனர். இதன்பின், தமிழ்நாடு வேளாண் மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வெ.கீதாலட்சுமியை அக் குழு சந்தித்து, எந்தெந்த வகையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகமும், எத்தியோபியா நாட்டைச் சேர்ந்த வேளாண்மைத் துறையும் இணைந்து செயல்படலாம் என்று கலந்துரையாடினர். இதையடுத்து அக்.11 ஆம் தேதி யன்று அந்த உயர்மட்டக்குழு தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திலுள்ள விவசாயி தகவல் மையம் (Kisan Call Center), தண்ணீரில் கரையக்கூடிய உரங் கள் தயாரிக்கும் வசதி, நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, பூச்சிகள் அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் பற்றி அறிந்து கொண்டனர். மேலும், வேளாண் அறிவியல் நிலையங்கள், பூச்சி – நோய் கட்டுப்பாடு குறித்த அறிவுரைகள், வானிலை அறி விப்புகள், உயிர்கட்டுப்பாடு காரணி கள், தனியார் நிறுவனங்கள் மேற் கொள்ளும் விரிவாக்கப் பணிகள் போன்றவை குறித்து அப்பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகளுடன் கலந் துரையாடினர். இதன் அடுத்த கட்டமாக, இந்தக் குழு ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் விஜயவாடா மற்றும் புது தில்லிக்கு செல்கின்றனர். இந்தக் கல்வி சுற்றுலா சம்மந்தப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் புதுதில்லியி லுள்ள உலக வங்கியின் ஆலோசகர் இம்மத் பட்டேல் செய்திருந்தார்.