districts

img

நீதிபதிகள் பற்றாக்குறையால் வழக்கு விசாரணை தாமதமாகிறது

உதகை, ஜுன் 2- நீதிபதிகள் பற்றாக்குறையால்  நீதிபதிகளின் வேலைப்பளு அதி கரித்து வழக்கு விசாரணைகள் தாமதமாவதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஆதங்கத்தை வெளிப் படுத்தியுள்ளார்.  நீலகிரி மாவட்டம், உதகை பிங் கர்போஸ்ட்டையடுத்த காக்காத் தோப்பு பகுதியில் சுமார் 4 ஏக்கர்  பரப்பளவில் ரூ.37 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த  ஒருங்கிணைந்த கோர்ட்டு வளா கத்தில் மாவட்ட மற்றும் அமர்வு நீதி மன்றம், விரைவு மகளிர் நீதிமன் றம், சார்பு நீதிமன்றம் உட்பட 8  நீதிமன்றங்கள் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாக  கட்டிட திறப்பு விழா வியாழனன்று  நடைபெற்றது. இதில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கலந்து கொண்டு நீதிமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசு கையில், சாமானிய மனிதனின் நீதிக்கான கடைசி நம்பிக்கை நீதித் துறையாகும். தாமதப்படுத்தப்ப டும் நீதி  மறுக்கப்படுவதற்கு சமம்.  ஆனால், நீதிபதிகள் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்புகள் போதுமானதாக இல்லாத நிலை யில், வழக்கு எப்போது முடியும் என்பது கேள்விக்குறியாக உள் ளது. நீதிபதிகள் பற்றாக்குறை கார ணமாக நீதிபதிகளின் வேலை  பளு அதிகரிக்கிறது. இதனால், வழக்கு விசாரணை தாமதமாகி றது. எனவே, தேவையான நீதிபதி கள் மற்றும் போதுமான கட்டமைப் புகள் மிகவும் முக்கியமாகும்.  தமிழகத்தில் உட்கட்டமைப்பு களை மாநில அரசு சிறப்பாக ஏற்ப டுத்தி வருகிறது. பெரும்பாலான நீதிமன்றங்கள் சொந்த கட்டிடங் களில் இயங்குகின்றன. சென்னை யின் மையப்பகுதியில் நீதிமன்ற வளாகம் அமைக்க நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. 116 நீதிமன்றங்கள் கொண்ட சிவில் நீதிமன்றம் அப் பகுதியில் ஏற்படுத்தப்பட உள் ளது. 

மேலும், நீலகிரி மாவட்டத்தில் 92 சிவில் வழக்குகள் மற்றும் 33 கிரிமினல் வழக்குகள் 20 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளன. இதேபோல 3 வழக்குகள் 25 ஆண்டுகளாக நிலுவையில் உள் ளன. இந்த தாமதத்தை நியாயப் படுத்தக்கூடாது. நிலுவை வழக்கு களின் விசாரணைகளை விரை வாக முடிக்க வேண்டும். 5 ஆண்டு களுக்கு மேல் நிலுவையில் எந்த  வழக்கும் இல்லை என நிலையை  எட்ட வேண்டும். இதற்கு வழக்கறி ஞர்கள் ஒத்துழைக்க வேண்டும். நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர் மன்றம் இணைந்து செயல்பட வேண்டும். அதன் மூலம் வழக்குக ளின் விசாரணையை துரிதப்படுத் தலாம். இளம் வழக்கறிஞர்கள் தங்கள் பணி முடிந்த பின்னர் வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ சென்று விடுகின்றனர். அப்படி  அல்லாமல் நீதிமன்ற நடவடிக்கை களை அவர்கள் கவனிக்க வேண் டும். மூத்த வழக்கறிஞர்கள் வாதிடு வது, அதற்கு நீதிபதிகளின் எதிர் வினை, வழக்கில் நீதிபதிகளின் மனநிலை ஆகியவற்றை கூர்ந்து கவனித்தால், எதிர்காலத்தில் தங் களது வழக்கு விசாரணைக்கு அவை பெரும் உதவியாக இருக் கும்.  உதகையில் இந்திய தண் டனை சட்டத்தை லார்டு மெக் கலே வரையறுத்துள்ளார். இத னால், நீலகிரி மாவட்டம் சட்டத்தை  வரையறுப்பதிலும் பங்கு வகித் துள்ளது. மெக்கலே மூன்று மாதங் கள் இங்கேயே தங்கி இப்பணி களை செய்துள்ளார். இதற்கு நீலகி ரியின் இயற்கை மற்றும் கால நிலையும் மற்றொரு காரணமா கும். நீலகிரி மாவட்டத்தில் வனத் துறை பெரும் பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் சுற்றுச்சூழல் சிறப் பாக பராமரிக்கப்படுகிறது என பாராட்டு தெரிவித்தார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் குமார், சேஷசாயி, ஆனந்தி, பவானி சுப்பராயன், சட்டத்துறை  அமைச்சர் ஆர்.ரகுபதி, வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்தி ரன், மாவட்ட நீதிபதி முருகன்,  மகிளா நீதிமன்ற நீதிபதி நாராய ணன், மாவட்ட ஆட்சியர் அம்ரித்,  மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஆஷிஸ் ராவத், நீலகிரி பார்  அசோசியேஷன் தலைவர் சந்திர போஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.