கோவை, நவ. 25- வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாகதேயிலை தோட்டத்திற்குள் சுற்றுவ தால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சத் திற்குள்ளாகியுள்ளனர். பொள்ளாச்சி அடுத் துள்ள வால்பாறை வனத்தையொட்டிய மலைப்பகுதியாகும். தேயிலையும், சுற்றுலா மட்டுமே பிரதானமாக வருவாய் ஈட்டித்தருக்கிறது. பெரும் தேயிலை தோட்டங்கள் உள்ள இப்பகுதியில், இங்கு கடந்த சில நாட்களாக காட்டு யானைக் கூட்டங்கள் தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புக்குள் பகுதிகளில் வெகுசாதார ணமாக உலா வருகிறது. மேலும், இந்த யானைக்கூட்டம் ரேசன்கடை மற்றும் வீடு களை இடித்து சேதப்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவரை தாக்கியது. இந்நிலையில், வெள்ளியன்று பத்துக்கும் மேற்பட்ட யானைகள் சிறுகுன்றா கல்லார், பவர்ஹேம்ஸ் பகுதி தேயிலை தோட்டத் திற்குள் உள்நுழைந்தது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்வ தற்கு அச்சமடைந்தனர். மேலும், யானை கள் கூட்டம்கூட்டமாய் சுற்றுவதால் சுற்றுலா பயணிகளும் சுற்றுலா தளங்களுக்கு செல் வதை தவிர்த்தனர்.