districts

img

கோவையில் விடியவிடிய பெய்த கனமழை

கோவை, நவ. 9- கோவை மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்த தால் பல்வேறு இடங்களில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகி றது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்தும் பாதிக் கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை மேற்குத்  தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான, கணுவாய்,  தடாகம், சோமையனூர் பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், பொன் னுத்து அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் இரவு முழுவ தும் பெய்த கனமழை காரணமாக கணுவாய் பன்னிமடை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை நீர் ஆர்ப் பரித்து வெள்ளம் போல் ஓடியது. வழக்கத்தை விட புதனன்று இரவு அதிக அளவு மழை பெய்ததால் இந்த  தரைப்பாலத்தில் அதிகளவு மழை நீர் ஓடுகிறது. இதனால்,  பாலத்தை கடக்க முடியாமல், பொதுமக்கள் வேறு பாதையை  பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் வெள்ளக்கிணர், அம்பேத்கர் நகர் உழைப் பாளர் வீதி  பகுதியில், கன  மழையின் காரணமாக வீடுகளில்  நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்குள்ள  50 குடும்பங்களைச் சார்ந்த 125 க்கும் மேற்பட்ட மக்களை ஆதி அறக்கட்டளை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இவர்களை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகரட்சி ஆணையர்  சிவகுரு பிரபாகரன் ஆகி யோர் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட்டனர்.