உதகை, ஜூலை 13- நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் பல்வேறு சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில், கூட லூர் அருகே பாலம் இடிந்த விபத்தில் சிக்கி யவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென் மேற்கு பருவமழை பெய்யும். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக ஜூன் 2 ஆவது வாரத்தில் தொடங்கியது. இதற் கிடையே தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், நீலகிரி உள்பட தமிழகத் தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதற்கு ஏற்றார் போல் கடந்த ஒரு வாரமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் முழுவதும் நீலகிரியில் பனிமூட்டம் காணப்படுவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதற்கு இடையே நாள் முழுவதும் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது.
மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் புதனன்று காலை 8 மணிக்கு 18 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவானது. இதனால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைகளில் மரம் விழுந்தது. மேலும் ஆங்காங்கே லேசான மண் சரிவு ஏற்பட்டது. பெர்ன்ஹில், குளி சோலை சாலை, உதகை- தலைக்குந்தா சாலை, முத்தோரை பாலாடா அருகே சாலை யில் விழுந்த மரங்களை உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமை யிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெட்டி அகற்றி னர். மேலும், உதகை அரசு மருத்துவமனை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில், அங்கி ருந்த ஒரு வேன் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இதில் காருக் குள் சிக்கிய குன்னூர் பகுதியைச் சேர்ந்த ராம லிங்கம் என்பவர் உட்பட இரண்டு பேரை 2 பேரை பொதுமக்கள் போராடி மீட்டனர். இதில், காயமடைந்த ராமலிங்கம் சிகிச்சைக் காக உதகை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் அழகர் மலை பகுதியை சேர்ந்த ரகு (37) என்பவர் தலைகுந்தாவிலி ருந்து உதகைக்கு காரை பழுது பார்க்கும் நிலையத்தில் விடுவதற்காக சென்று கொண் டிருந்தார். அப்போது பட்பயர் பகுதியில் கார் மீது மரம் விழுந்ததில் அவர் படுகாயமடைந் தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். செம்பாலா பாட் டிகடை பகுதியில் பஷீர் என்பவரது வீட்டின் பின்னால் இருந்த கடந்த ஒரு வருடத்திற்கு முன் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து விழுந் தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தரைப்பாலம் இடிந்து விபத்து
கூடலூர் பகுதியில் செவ்வாயன்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கால் வாய்கள், ஓடைகள் உள்ள நீர் நிலைகளில் அதிக வெள்ளம் செல்கிறது. இந்நிலையில் கூடலூரிலிருந்து மைசூர், பெங்களூர், நாடு காணி செல்லும் சாலைகளில் ஓரத்திலிருந்த மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இவற்றை தீயணைப்பு துறையி னர் வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத் தினர். இதேபோல் உதகை - பந்தலூர் சாலை யிலும் மரம் விழுந்தது. இதற்கிடையே கூடலூர் அருகே உள்ள மங்குலி பகுதியில் தொடர் மழை காரண மாக பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் மீது நடந்து சென்ற மாணிக்கம் என் பவர் பாலத்தின் தடுப்பு கம்பிகளை பிடித்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக நீண்ட துணி மூலம் அவரை பத்திரமாக மீட்டனர். இதன் பின்னர் சிகிச்சைக்காக அவர் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டார்.
11 கிலோ மீட்டர் காற்றின் வேகம்
நீலகிரி மாவட்டத்தில் உதகை, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அதேபோல் வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் ஆக இருந் தது. மேலும் காற்றில் ஈரப்பதம் 86 சதவிகித மாக பதிவானது. தொடர்மழை காரணமாக நீலகிரியில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. நீலகிரி மாவட் டத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டால் 1027 எண்ணை தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வா கம் அறிவுறுத்தி உள்ளது. முன்னதாக, கடந்த 2 நாட்களாக கடும் குளிர் நிலவுவதால் பள் ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர். மேலும், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கூடலூர், பந்த லூர், உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டார். அதே சமயத்தில் குன்னூர், கோத்தகிரி பகுதியிலும் கடும் குளிர் நிலவுவதால் இந்த பகுதியிலும் விடுமுறை விட வேண்டும் என்று மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.