districts

img

கோவை மாநகரத்திற்கு 219 ஆவது பிறந்தநாள்

தென்னிந்தியாவின் மான்ஸ்செஸ்டர், தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நக ரம், சென்னை, ஹைதராபாத், பெங்களூருக்கு அடுத்து தென்னிந்தியாவின் நான்காவது மிகப் பெரிய மாநகரம், இந்தியாவின் 11ஆவது பெரிய மாநகரம் என பல்வேறு சிறப்புகளை தன்ன கத்தே கொண்டுள்ளது கோவை. சுவையான சிறுவாணி குடிநீருக்கும், கொங்கு தமிழுக் கும், மிதமான தட்ப வெப்ப நிலைக்கும் பெயர் பெற்ற கோவை ஒரு காலகட்டத்தில் ஆங்கிலே யரால் வாழத் தகுதியற்ற ஊர் என அறிவிக் கப்பட்டது. ஆனால் இன்று  லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இட மாக இருந்து வருகிறது.  கோவன் என்ற பழங்குடியின தலைவன் ஆண்ட இப்பகுதி கோவன் புத்தூர் என்றே அழைக்கப்பட்டதாகவும் தற்போது அது மருவி  கோயம்புத்தூர் என மாறியதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சேரர், சோழர், பாண்டியர், விஜய நகர மன்னர்கள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், பிரிட்டிஷ் என பலரின் ஆளுகைகளுக்கு கீழ் மாறி மாறி இருந்து வந்த கோவை மாநகரத்தின் கோட்டை மேடு பகுதியில் இருந்த கோட்டைக்காக திப்பு சுல் தானும், ஆங்கிலேயர்களும் போர் புரிந்துள்ள னர். திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்கு பிறகு 1799 ஆம் ஆண்டு வாக்கில் கோவை ஆங்கிலேயர் வசமானது.  பின்னர் நிர்வாக வசதிக்காக 1804  ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி கோவை நகரை தலைநகரமாக கொண்டு கோயம்புத் தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த நுற்றாண்டின் தொடக்கத்தில் கோவை மாவட்டத்தில் பவானி, கோயம் புத்தூர், தாராபுரம், ஈரோடு, கரூர் கொள்ளே கால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்க லம், உடுமலைப்பேட்டை என 10 வருவாய் வட் டங்கள் இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கொள்ளேகால் கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் மற்ற வருவாய் வட்டங்கள் நிர்வாக வசதிக்காக பல மாவட்டங்களாக பிரிந்தன. கோவை நகரில் 19 ஆம் நூற்றாண்டில் கடும் பஞ்சங்களிலும், 20  ஆம் நூற்றாண்டில் காலரா, பிளேக் ஆகிய  கொள்ளை நோய்களிலும் சிக்கி ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர். பின்னர் நகரப் பகுதி விரிவாக்கம், சுகாதாரமான குடிநீர் ஆகி யவை அந்நிலையை மாற்றியது. 1866 ஆம் ஆண்டில் கோவை நகராட்சியாக தரம் உயர்ந் தது. 1890 ம் ஆண்டில் துவக்கப்பட்ட ஸ்டேன்ஸ்  மில் எனப்படும் கோயம்புத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் பஞ்சாலை உற்பத்தி யையும், நகரின் தொழில் வளர்ச்சியையும்  துவக்கி வைத்தது. பைகாரா மின்சாரம்  கோவைக்கு வந்த பின்னர், பஞ்சாலைகளின்  எண்ணிக்கை அதிகரித்தது.

கடந்த நூற்றாண்டில் கோவை மக்களின் வாழ்வாதரமாக பஞ்சாலைகள் இருந்தன. பின் னர் பம்ப், மோட்டார் தொழில்களும், இயந்திர பாகங்களை உற்பத்தி செய்யும் பவுண்டரி களும் என அதனை சார்ந்து பல்வேறு தொழில் கள் உருவாகின. வெட் கிரைண்டர் கோவை யில் தான் முதன் முதலில் உருவாக்கப்பட் டது. இப்படி புதிய தொழில்கள் இணைந்து கோவையை தொழில் நகரமாக உருவெடுக் கச் செய்தன. 1831 ஆம் ஆண்டில் ஆடிஸ் என்ப வரால் துவங்கப்பட்ட லண்டன் மிசினரியே கோவையின் முதல் பள்ளி. இன்று பல்வேறு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் புகழ் பெற்ற நகரமாக கோவை உள்ளது.1816 ஆம்  ஆண்டில் நீதிமன்றமும், 1862 ஆம் ஆண்டில் சிறைச்சாலையும் கோவைக்கு வந்தன. வெரைட்டி ஹால் பகுதியில் சாமிக்கண்ணு வின்செண்ட் முதல் திரையரங்கை கட்டி, தமிழ் சினிமாவின் ஆரம்பத்தை துவக்கி வைத்தார். இங்கு செயல்பட்ட சென்ட்ரல் ஸ்டுடியோ, பட்சி ராஜா ஸ்டுடியோ ஆகியவற்றில் பல திரைப் படங்கள்  எடுக்கப்பட்டுள்ளன.

மரியாதையை உருவாக்கிய செங்கொடி

வற்றாத ஜீவ நதியோ, துறைமுகமோ, கனிம வளங்களோ, வரலாற்று முக்கியத்துவமோ இல்லாமல் ஒரு சாதாரண நிலப்பரப்பை கொண்ட கோவை மாநகரம் இன்று மாபெ ரும் தொழில் மையமாக உருவெடுத்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்குள் இந்த வளர்ச் சியை கோவை மாநகரம் எட்டியுள்ளது. இத மான காலநிலையும், தங்கு தடையற்ற பைகாரா மின்சாரமும் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட, தொழிலாளர்களின் அயராத கடின உழைப்பால் கோவை வளர்ச்சியின் உச்சம் தொட்டுள்ளது. இந்த வளர்ச்சியின் பின்னணியில், ஸ்டேன்ஸ் மில் தியாகிகளின் வரலாறும், சின் னியம்பாளையம் தியாகிகளின் உயிர்த்தியா கம் என தொழிலாளர்களின் உரிமைகளை பெருவதற்காக நடைபெற்ற போராட்டங்களும், தியாகங்களும் எண்ணிலடங்காதவை. தொழி லாளி என்றால் ஏளனமாய் பார்த்த காலத்தில் தொழிலாளிக்கு மரியதையை பெற்றுத்தர போராட்ட வடிவங்களை முன்னெடுத்த செங் கொடி இயக்கத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. தமிழ்நாட்டிற்கே வர்க்க உணர்வை உரு வாக்கச்செய்ததில் கோவை தொழிலாளி வர்க் கத்தின் ஒற்றுமை கல்வெட்டுகள் பேசாதது, காலம் என்றென்றும் பேசிக்கொண்டிருக்கும். பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள கோவை, நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச் சியை அடைந்து வருகிறது. தொழில் துறை யிலும், கல்வி துறையிலும் முன்னணி நகரமாக உருவெடுத்து வருகிறது. பல்வேறு துறைகளி லும் சாதனைகளை புரிந்து வருகிறது. அதற் கேற்ப உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டு வருகின்றன. விமான நிலைய விரிவாக்க பணிகளும், போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலைகளில் மேம்பாலப் பணிகளும் நடை பெற்று வருகின்றன.  நகர வளர்ச்சி காரணமாக மரங்கள் வெட்டப்படுவது, காடுகள் சுருக்கம் உள்ளிட்ட காரணங்களால் தட்ப வெப்ப நிலை  மாறி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. என்றாலும் வெளி ஊர்களில் இருந்து வந்து குடியேறுபவர்கள் கூட சில ஆண்டுகளில் மன தளவில் மண்ணின் மைந்தர்களாக மாறி விடு வதும், இங்கேயே தங்கி விட வேண்டுமென விரும்புவதும் தான் கோவையின் சிறப்பம்ச மாக உள்ளது. கோவை வாசிகள் மற்ற பகுதிக ளுக்கு  சென்றாலும், “என்ன இருந்தாலும் எங்க  கோவை மாதிரி வருமா?” என அவர்கள் மன தில் சுமந்து செல்லும் கேள்வியே கோவையின் தனிச் சிறப்பாகும். இன்று 219 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது கோவை. -கார்த்திக் மதிவாணன்