இளம்பிள்ளை, ஜூன் 22- இளம்பிள்ளையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புறநோ யாளிகள் பிரிவு மையத்தை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யம் புதனன்று திறந்து வைத்தார். சேலம் மாவட்டம், மல்லியகரை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் மையத்தினை தமி ழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியம் புதனன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புறநோயாளிகள் மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இளம்பிள்ளை பேரூராட்சி தலைவர் நந் தினி ராஜ கணேஷ், வீரபாண்டி வட்டார மருத்துவர் சக்தி வேல், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.