திருப்பூர், மே 28 - திருப்பூரில் புதிதாக அரசு செவிலியர் கல்லூரி அமைக்கப் படும் என்று மாநில சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் கூறியுள் ளார். திருப்பூர் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனை வளாகத்தில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட் டுள்ளது. இதனை மருத்துவ மனையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் ஞாயிறன்று திறந்து வைத் தார். இதையடுத்து செய்தியாளர் களிடம் அமைச்சர் சுப்பிரமணியம் கூறியதாவது: திருப்பூர் - தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரி தொடர்ந்து செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் புதிய மருத்துவமனை கட்டட கட்டுமானப் பணிகள் முடிவடைந்தது. புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை 500 படுக்கை வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஞாயிறன்று திறந்து வைக்கப் பட்டது.
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை திருப்பூர் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது, இந்தி யாவில் உள்ள அனைத்து மாநில மக்களுக்குமே மருத்துவம் அளிக் கக்கூடிய மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது என்று கூறி னார். தற்போது 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடம் திறக்கப் பட்டுள்ளதன் மூலம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 1170 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் 2000க்கும் மேற் பட்ட புறநோயாளிகள் வந்து செல் லக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும், அரசு மருத்துவமனை யில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 20 செவிலியர் கல்லூரிகள் அமைக்க ஒன்றிய அரசிடம், தமிழ் நாடு அரசு கோரிக்கை வைத்தது. இதில் தலா ரூ.10 கோடி நிதியாதா ரத்துடன் 11 செவிலியர் கல்லூரிகள் அமைத்துக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் முதல் மாவட்டமாக திருப்பூர் மாவட் டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டி ருக்கிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரே ஒரு பல் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில் ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று புதுக்கோட்டையில் புதிய பல் மருத்துவக் கல்லூரி கட்டப்பட் டுள்ளது. அங்கு 50 பிடிஎஸ் பல் மருத்துவப் படிப்பிற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது திருப்பூர் மாவட்டத்தில் அதிநவீன புற்று நோய் மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நிதி திரட்டி வருகின்றன. ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மருத்துவமனையில், நமக்கு நாமே திட்டத்தில் ரூ.30 கோடி நிதி திரட்ட திட்டமிட்டு, தற்போது 17 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி உள்ளனர். புற்றுநோய் சிகிச்சை மையம் விரை வில் அமைக்கப்படும்.
போதைப் பொருட்களை ஒழிப் பதில் தமிழ்நாடு அரசு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கடந்து சில நாட்களுக்கு முன் பாக ஆந்திர மாநிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பது குறித்து தகவல் கிடைத்தவுடன் தமிழ்நாடு காவல் துறை ஆந்திர காவல்துறையிடம் பேசி அந்த கஞ்சா செடிகளை அழித் தனர். தமிழ்நாட்டிலும் போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாகையில் ஹிஜாப் அணிந்த மருத்துவரை அவதூறு செய்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதா கவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். மாநகரில் 34 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள், நகராட்சிகளில் 5 மையங்கள் என திருப்பூர் மாவட் டத்தில் 39 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஒரு சில தினங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ், திருப்பூர் நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயன், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப் பினர் க.செல்வராஜ், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் முருகேசன் ஆகி யோர் உடனிருந்தனர்.