சேலம், ஜூன் 8- ஓமலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை யாசிரியரை காவல் துறையி னர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தனியார் மெட்ரி குலேஷன் பள்ளியில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்ற னர். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் தலைமையாசிரியராக விஜயகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேட்டூர் அருகே உள்ள நால்ரோடு பகுதியைச் சேர்ந்த இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக வும், இதுதொடர்பாக வெளியில் சொன்னால் இன்டர்னல் மார்க் குறைத்து விடுவதாகவும் மாணவிகளை மிரட்டிய தாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஒரு மாணவி தன்னு டைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் புதனன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஓமலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சங்கீதா, அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றும் குழந்தைகள் மாவட்ட பாதுகாப்பு நலத்துறை அலுவலர்கள் ஆகியோர் மாணவிகளிடம் விசா ரணை மேற்கொண்டனர். இதில், தலைமையாசிரியர் விஜய குமார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதன்பின் விஜயகுமாரை கைது செய்த காவல் துறையினர், போக்சோ உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சேலம் சிறையில் அடைத்த னர்.