districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வெள்ளியங்கிரி மலை ஏறியவர் மூச்சுத்திணறி பலி

வெள்ளியங்கிரி மலை ஏறியவர் மூச்சுத்திணறி பலி கோவை, மார்ச் 20- வெள்ளியங்கிரி மலை ஏறிய கோவையைச் சேர்ந்த ஒரு வர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. கோவை செல்வபுரம், சரோஜினி நகரைச் சேர்ந்தவர் சுகுமார் கண்ணன் (33). இவர் டவுன்ஹால் பகுதியில் உள்ள பலகாரக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த வெள்ளியன்று இரவு வெள்ளியங்கிரி மலைக்கு சாமி கும்பிடு வதற்காக ஏறினார். இந்நிலையில், ஐந்தாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  ஆலந்துறை காவல் துறையினர் சுகுமாரை மீட்டு, மலை  அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு ஆம்புலன்சில் வைத்து மருத்துவர்கள் பரிசோதனை மேற் கொண்டனர். ஆனால், சுகுமார் கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆலாந்துறை காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில்,  சுகுமார் கண்ணனுக்கு மூன்று வருடங்களாக சர்க்கரை நோய் இருந்ததாகவும், அதற்கு அவர் இன்சுலின் மருத்து  செலுத்தி வந்ததும் தெரிய வந்தது. வெள்ளியங்கிரி மலை யில் கடுமையான குளிர் நிலவி வருவதால், மூச்சுத்திண றல் ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம், என கூறப்படுகி றது.

ரூ.15 கோடி மதிப்பில் கோரிசோலா அணை பூங்கா

உதகை நகராட்சி நிர்வாகம் முடிவு

உதகை, மார்ச் 20- உதகை அருகேயுள்ள கோரி சோலா அணையை சுற்றிலும் ரூ.15 கோடியில் பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள உத கைக்கு நாள்தோறும் ஏராளமான சுற் றுலா பயணிகள் வருகின்றனர். குறிப் பாக, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலி ருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற் றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்ட பெட்டா காட்சி முனை, குன்னூர் சிம்ஸ் பூங்கா, பைக்காரா அணை மற்றும்  நீர்வீழ்ச்சி போன்ற பகுதிகளுக்கு செல் கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக புதி தாக சுற்றுலா தலங்கள் ஏதும் உருவாக் கப்படாத நிலையில், இந்த சுற்றுலா  தலங்களுக்கே சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட் டுள்ளது. எனவே, புதிதாக சுற்றுலா தலங்களை துவக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வலியு றுத்தி வருகின்றனர். இந்நிலையில், உதகை நகராட்சிக் குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் புதி தாக சுற்றுலா தலங்களை அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள் ளது. இதன்படி, உதகை அருகே தொட்ட பட்டா மலை அடிவாரத்தில் உள்ள  கோரிசோலா அணையை சுற்றிலும் ரூ.15 கோடியில் புதிதாக பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது. அணை யில் நீரின் கொள்ளளவையும் அதிக ரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கோரிசோலா அணையை நம்பியுள்ள மக்களின் தண்ணீர் பிரச்சனையும் தீர  வாய்ப்புள்ளது. அதேசமயம், சுற்றுலா  பயணிகளுக்கு புதிதாக ஒரு சுற்றுலா தலம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையா ளர் காந்திராஜன் கூறுகையில், உதகை  நகராட்சிக்குட்பட்ட கோரிசோலா அணையை மேம்படுத்த திட்டமிட்டுள் ளோம். இதற்காக, ரூ.15 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தமி ழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதியளித்து, நிதி ஒதுக்கீடு செய்தால், இங்கு புதிதாக அணையை  சுற்றிலும் பூங்கா அமைக்கப்படும். மேலும், அணையில் தண்ணீர் அளவை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இதன் மூலம் சுற்றுலா பயணி களுக்கு புதிதாக ஒரு சுற்றுலா  தலம் கிடைக்கும். மேலும், அணையில் சிறிய படகுகள் இயக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது, என்றார்.

ரேசன் அரிசியை கடத்தியவர் கைது

ஈரோடு, மார்ச் 20- அந்தியூர் அருகே உள்ள வேலம்பட்டி பகுதியில் ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 1,500  கிலோ ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந் தது. இதுதொடர்பாக  வாகன ஓட்டுநர்  சிவலிங்கம் என்பவரை போலீசார் கைது செய்து  விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

அடகு நகையில் மோசடி செய்த சம்பவம்: 144.8 பவுன் நகை மற்றும் ரூ.19.80 லட்சம் மீட்பு

திருப்பூர், மார்ச் 20- பல்லடம் வட்டம் கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி  கிளையில் நகைக்கடன் பிரிவில் நகைகளைத் துண்டித்து  ஏமாற்றிய தலைமைக் காசாளர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து 144.8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.19 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை மீட்கப்பட் டன. கேத்தனூர் வங்கி கிளையில் அடகு நகைகளில் மோசடி செய்யப்பட்டிருப்பதாக வாடிக்கையாளர்கள் தொடர்ச்சி யாக அளித்த புகாரின்பேரில், வங்கி மேலாளர் சுதாதேவி காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் மார்ச் 17ஆம் தேதி புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் அடகு நகை களை சிறு பகுதியாகத் துண்டித்து ஏமாற்றி வந்த தலைமைக் காசாளர் சேகர் (57) என்பவரை வெள்ளியன்று பல்வேறு  பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 144.8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.19 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவையும் மீட்கப் பட்டது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

அவிநாசியில் நுகர்வோர் விழிப்புணர்வு

அவிநாசி, மார்ச் 20- நுகர்வோர் தினத்தையொட்டி, அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையின்  சார்பில் நடைபெற்ற இந்த நுகர் வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் நளதம் தலைமை வகித்தார். துறைத் தலைவர் செல்வதரங்கினி வர வேற்றார். ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையச் செயலாளர் பாலசுப்பிரமணியம், பெருந்துறை நுகர்வோர்  பாதுகாப்பு மையத் தலைவர் பல்லவி பரமசிவன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். இதில் நுகர்வோர் பாதுகாப்பு மற் றும் பொருள்கள் கலப்படம், உடலுக்கும் உயிருக்கும் தீங்கு  விளைவிக்கும் பொருள்கள், விளம்பரங்கள் மூலம் மக்கள் மனதை மாற்றி விற்பனை செய்யப்படும் பொருள்களின் தரம் உள்ளிட்டவை குறித்து பேசினர். உதவி பேராசிரியர் புவ னேஸ்வரி நன்றி தெரிவித்தார்.

“ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” கோவையில் இன்று நூல் வெளியீட்டு விழா

கோவை, மார்ச் 20- “ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” என்னும் நூல் வெளியீட்டு விழா கோவையில் திங்களன்று மாலை நடைபெற உள்ளது. ஏ.ஜி.நூரானி எழுதி பிரன்ட்லைன் ஆசிரியர் ஆர்.விஜய் சங்கர் ராமச்சந்திரன் தமிழில் மொழிபெயர்த்த ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் என்கிற நூல் வெளியீட்டு விழா கோவையில் திங்களன்று (இன்று) நடைபெறு கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழுவின் ஒருங்கினைப்பில், மசக்காளிபாளையம் சாலையில் உள்ள ஹர்ஷா மஹா லில் திங்களன்று மாலை 5 மணிக்கு துவங்கப்பட உள் ளது.  இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். இவ்விழாவில், ரூ.895 விலை யுள்ள ‘ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ நூல், சலுகை விலையில் ரூ.700க்கு வழங்கப்பட உள்ள தாக நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பருத்தி ஏலம்

தாராபுரம், மார்ச் 20- திருப்பூர் மாவட்டம், மூல னூர் ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் பருத்தி விற் பனை மறைமுக ஏலம் நடை பெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல் ஈரோடு, கோவை மாவட்டங் களை சேர்ந்த 713 விவசா யிகள் பருத்தியை விற்ப னைக்காக கொண்டு வந்தி ருந்தனர். அதேபோல் பருத் தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத் தில் பங்கேற்றனர்.  இதில் அதிகபட்ச விலை யாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.11 ஆயிரத்து 89க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 600க்கும், சரா சரி விலையாக ரூ.10 ஆயி ரத்து 670க்கும் விலை  போனது. மொத்தம் 6,889 மூட் டைகள் ரூ.2 கோடியே 31 லட் சத்து 69 ஆயிரத்து 223க்கு விற்பனையானது.

தருமபுரி 1379 அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்

தருமபுரி, மார்ச் 20- தருமபுரி மாவட்டத்தில் 1379 அரசுப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் ஞாயிறன்று (மார்ச் 20) நடை பெற்றது. இந்த கூட்டத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள் ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் இணைந்து நம் பிள்ளைகள் பயிலும் பள்ளியை கற்றலுக்கு மேலும், உகந்த இடமாக ஆக்கி நமது பள்ளியாக மாற்று வோம், அனைவரும் வாருங்கள்  பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துவோம், அரசுப் பள்ளிகளை வளப்படுத்துவோம் உள்ளிட்ட கருத்துகள் குறித்து இப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடை பெற்றது. நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான் கோட்டை ஊராட்சியில் உள்ள அதியமான் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியமான் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு அரசுப்பள்ளிகளில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர் து.கணேஷ்மூர்த்தி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டார்.