districts

ஹர்ஷ் மந்தர் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது நியாயமல்ல

புதுதில்லி, மார்ச் 7- ஹர்ஷ் மந்தர் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது நியாயமல்ல என்றும் அகில இந் திய விவசாயிகள் சங்கம் கூறி யுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் அசோக் தாவ்லேயும், பொதுச் செயலாளர் ஹன்னன்முல் லாவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் கலவரங்களைத் தூண் டும் விதத்தில் வெறுப்புப் பேச்சுக் களை உமிழ்ந்த நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய  வேண்டும் என்கிற ஹர்ஷ் மந்தரின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது துரதிர்ஷ்டவசமா னதும், நேர்மையற்றதுமாகும் என்று அகில இந்திய விவசாயி கள் சங்கம் கருதுகிறது. ஹர்ஷ் மந்தரின் பொதுக்கூட்ட உரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் படித்துக்காண்பித்து, அரசு வழக் குரைஞர் உச்சநீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தி இருக்கிறார். இது அனைவராலும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
அரசமைப்பு சட்டத்துக்கு மேலானதல்ல
ஹர்ஷ் மந்தர், வன்முறையைத்  தூண்டவில்லை. மாறாக ஜாமியா  மிலியா இஸ்லாமியாவில் நடை பெற்ற அநீதிக்கு எதிராக அஹிம்சை வழியில் போராட வேண்டும் என்று தான் தன் பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.  அயோத்தி தீர்ப்பு குறித்தும், குடியு ரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் பேச்சுரி மையை அடிப்படை உரிமையாக உத்தரவாதம் செய்திருக் கிற அர சமைப்புச்சட்டத்தின் கீழ் முழு மையாக நியாயப்படுத்தக்கூடிய தேயாகும். உச்சநீதிமன்றமும், நாடாளுமன்றமும் அரசமைப்புச்சட் டத்திற்கும் மேலானவை அல்ல.  நாடும், அதன் அரசமைப்புச் சட்ட மும் ஆர்எஸ்எஸ்-இன் கொடிய நிகழ்ச் சிநிரலின் கீழ், வலதுசாரி மற்றும் மதவெறியர்களால் கடும் தாக்குத லுக்கு உள்ளாகியிருக்கும்போது, மதச்சார்பற்ற இந்தியக் குடியரசை, தங்களுடைய வெறிபிடித்த பாசிஸ்ட் இந்து ராஷ்ட்ரமாக மாற்ற முயற் சித் துக் கொண்டிருக்கும்போது, கூருணர்வுமிக்க குடிமக்கள் அனை வரும் அரசமைப்புச்சட்ட அமைப்புக ளான நீதித்துறை மற்றும் பொது  அமைப்புகள் மீது தான் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனினும் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அணுகுமுறை மக்களின் நம்பிக்கைக்கு விரக்தியை அளித்திருக்கிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஹர்ஷ் மந்தரின் பக்கம் நிற் கிறது. இந்த ஆழமான நழுவல் போக்கை உச்சநீதிமன்றம் மறுபரி சீலனை செய்திடும், அதன் மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் நீதி  வழங்க முன்வரும் என்று நம்புகி றோம்.