districts

img

கடன் தவணை கேட்டு பெண்களிடம் நள்ளிரவில் தகராறு நுண் கடன் வசூலிப்பவர்களின் அடாவடி

திருப்பூர், ஆக. 3 -  திருப்பூரில் மகளிர் சுய உதவிக் குழு கடன்  தவணை தொகை ரூ.600 செலுத்தவில்லை என நள்ளிரவு 12 மணிக்கு பெண்களை வீட்டுக்கு செல்ல விடாமல் பிடித்து வைத்த நுண் கடன்  வசூலிக்கும் நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  திருப்பூர் மாநகராட்சி குளத்துப்புதூர் பகு தியை சேர்ந்த 10 பெண்கள் இணைந்து குழு வாக மகேந்திரா பைனான்ஸில் தலா ரூ.40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். வாரம்  ரூ.1000 வீதம் 52 வாரம் செலுத்த வேண் டும் என்ற நிலையில் 28 வாரம் பணம் செலுத்தி யுள்ளனர். இந்த நிலையில், 29 ஆவது வாரம்  9 பேர் பணம் செலுத்தி விட்டனர், ஒருவர் உடல் நலம் குன்றியதால் 400 ரூபாய் மட்டும் கொடுத் துள்ளார்.  மகேந்திரா பைனான்ஸில் வசூல் செய்யும் நபர் சிவானந்தம் என்பவர், அந்த பெண்ணி டம் மீதம் தர வேண்டிய 600 ரூபாய் கொடுக்க வில்லை, அதைக் கொடுத்தால் தான் எல்லோ ரும் போகலாம் என நடுரோட்டில் இரவு 12  மணிக்கு அவர்களை தடுத்து நிறுத்தி வாக்கு வாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள் ளிட்ட அப்பகுதி மக்கள், வசூல் நபர் சிவா னந்தத்தை எச்சரித்து சத்தம் போட்டனர். இத னையடுத்து, அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை கண்ட நபர் அங்கிருந்து சென்றார்.