கோவை, ஆக.8- தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் கோவையில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூய்மைப் பணியாளர்களுக்கு அரசானையின் படி குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.460 வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி ஆப்ரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் டி.ரவிச்சந்திரன் தலைமை ஏற்றார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சங்கத் தின் பொதுச்செயலாளர் ரத்தினக் குமார், சுமைப்பணி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ராஜன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.