districts

img

உண்டியல் வசூல் செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி ஒப்படைப்பு

நாமக்கல், டிச.31- மார்க்சிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதியாக, உழைக்கும் மக்களிடம் உண்டியல் மூலம்  வசூல் செய்யப்பட்ட தொகை, கட்சியின்  மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக் கல் மாவட்டம், எலச்சிபாளையம் அலுவல கத்தில் திங்களன்று மாலை உண்டியல் நிதி அளிப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர்கள் பழனியம்மாள், கவிதா ஆகியோர் தலைமை  வகித்தனர். கட்சியின் மாவட்டச் செயலாளர்  எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எஸ்.தமிழ்மணி, சு.சுரேஷ், எலச்சி பாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர். ரமேஷ் மற்றும் கிழக்கு, மேற்கு ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வளர்ச்சி நிதியாக, உழைக்கும் மக்களி டம் உண்டியல் மூலம் வசூல் செய்யப்பட்ட  தொகை ரூ.ஒன்றரை லட்சம், கட்சியின் மாநில  செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ண னிடம் வழங்கப்பட்டது. எலச்சிபாளையம் மேற்கு ஒன்றியக்குழு சார்பில் ஒரு லட்சம்  ரூபாய், மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றியக் குழு சார்பில் ரூ.50 ஆயிரம் திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வசூல்  பணியில் ஈடுபட்ட தோழர்களை பாராட்டி, தலைவர்களின் வாழ்க்கை வரலாறு புத்த கம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.