districts

img

20 சதவிகித கூலி உயர்வு வழங்குக விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம், ஜூன் 11- குமாரபாளையத்தில், 20 சதவிகித கூலி  உயர்வு வழங்கக்கோரி ஞாயிறன்று விசைத் தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம்  ஆனங்கூர் பிரிவு சாலை அருகே நாமக்கல்  மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு,  சங்கத்தின்  நகரத் தலைவர் சரவணன் தலைமை ஏற் றார். இதில், குமாரபாளையத்தில் விசைத் தறி தொழிலாளர்களுக்கு 20 சதவிகித  கூலி உயர்வு அமல்படுத்த  வேண்டும். 8 மணி நேர வேலை முறையை அமல் படுத்த  வேண்டும்.  இஎஸ்ஐ, பிஎப் ஆகியவை வழங்க  வேண்டும். சம்பளத்துடன்  கூடிய அரசு விடுமுறையை  அமலாக்கிட வேண்டும்.  விசைத்தறிக் கூடங்களில்  முதலுதவி பெட்டிகள் அமைக்கப்பட வேண்டும். சுத்தமான குடிநீர், கழிப்பறை  வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்கள் எழுப்பப்பட்டன.   விசைத்தறி தொழிலாளர் சங்கம் மாவட்ட  செயலாளர் எம்.அசோகன், பொருளாளர் வெங்கடேசன், நகர உதவிச் செயலாளர் மோகன், நகர துணைத் தலைவர் சக்தி வேல் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். இதில் திரளான தொழிலாளர்கள் பங்கேற் றனர்.