கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த உழைப்பாளி மக்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பி.ஆர். நடராஜன் எம்.பி.யின் தொடர் போராட்டங்களால், அடுக்குமாடி குடியிருப்புகள் சாத்திய மாகி இருக்கின்றன. குடிசைகளிலும், தகரக் கொட்டகைகளிலும் வசித்து வந்த உழைப்பாளி மக்களை அடுக்கு மாடி குடியிருப்புக்கு சொந்தக் காரர்களாக மாற்றியிருக்கிறது. முக்கியமாக அவர்கள் இருப்பிடத்தி லிருந்து வெளியேற்றப்படாமல், வசிக்கும் பகுதியிலேயே அடுக்குமாடி ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளனர்.
தோழர் கே.ரமணியின் தொடர் முயற்சி
கோவை மாநகரத்தின் மையப் பகுதியில் காந்திபுரம் சித்தாபுதூரில் வி.கே.மேனன் ரோட்டில், 1972-க்கு முன்பு 40 ஆண்டு காலம் மாநக ரத்தில் தூய்மை பணியாற்றிய 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை களிலும் தகர கொட்டைகைகளிலும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு மறைந்த தலைவர் தோழர் கே. ரமணி-யின் தொடர் முயற்சியால் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரி யம் மூலம் 1972-இல் 216 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டது. பின்னாளில் இவை பராமரிப்பி ன்றி விடப்பட்ட நிலையில், குடிசை வாழ் மக்களும் அடுக்கு மாடியில் குடியிருந்தவர்களும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பில்லாத நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழே நூற்றுக்கணக்கான குடிசை களில் வசித்து வந்தனர்.
இந்நிலை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தியதாலும் குடி சையில் வாழ்ந்த 300 குடும்பங் களுக்கு கோவை கீரணத்தம் பகுதி யில் நகர்புற மேம்பாட்டு வாரியத்தால் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் நிர்ண யம் செய்த தொகையை செலுத்தி வீடு களை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. தற் போது நாடாளுமன்ற உறுப்பினரின் தொடர் தலையீட்டால் மாநகராட்சி பாதாளச் சாக்கடை இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
119 வீடுகள்
அதேபோல கோவை மாநகரம் இன்றைய 48வது வட்டத்தில் ராம கிருஷ்ணா மருத்துவமனை அருகில் அமைந்திருப்பது அண்ணாநகர் ஜவகர் நகர் பகுதி. இப்பகுதியில் உள்ள உழைப்பாளி மக்கள் பல்லாண்டு கால மாக நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் குடியிருந்து வந்தனர். இந்நிலை யில் அங்கு வசித்த 119 குடும்பங் களுக்கு அவர்களது வீடுகளை அவர் களுக்கே கிரையம் செய்து கொடுத்திட நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தை - தமிழக அரசை வலியுறுத்தி பி.ஆர். நடராஜன் தலைமையில் தொடர் இயக்கம் நடைபெற்றது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்கள் டி.எம். பழனிச்சாமி, ஜி. வேலப்பன் மற்றும் சிங்காரம் ஆகியோரது தொடர் முயற்சியின் காரணமாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பி.ஆர். நடராஜன் அவர்களும் யூ. கே. சிவஞானமும் அன்றைய நில நிர்வாக ஆணையரை சந்தித்து பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே. தங்கவேல், யூ.கே. சிவஞானம், டி.எம். பழனிச்சாமி ஆகியோர் அன் றைய வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களைச் சந்தித்து தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தியதன் காரணமாக 119 வீடுகளை அங்கே வசித்த பயனாளி களுக்கே சொந்தமாக்கிட நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தால் உத்தரவு பெறப்பட்டு அமலாகி உள்ளது.
முத்தனம்குளம் பகுதியில்...
யின் முன்னாள் மாநில செயலாளர் தோழர் என். வரதராஜன் தலைமையில் அங்கே வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அங்கேயே இடங்களை ஒதுக்கி பட்டா வழங்கிட போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அவர்களை அங்கி ருந்து அகற்ற முயற்சி எடுத்தபோது நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் உறுதியான போராட்டங்களுக்கு பின்பு, அங்கு வசித்த அனைவருக்கும் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சுங்கம் பைபாஸில்...
கோவை மாநகரம் ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி யின் காரணமாக அங்கே வசித்து வந்த 172 குடும்பங்களை ஆக்கிரமிப்பு என்பதன் பெயரால் மாவட்ட நிர்வாகம் காலி செய்திட முயற்சித்த போது நாடாளுமன்ற உறுப்பினரின் தலையீடு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் இயக்கம் காரணமாக அவர்கள் அனைவருக்கும் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அடுக்குமாடிகளின் கீழ் இருந்த குடிசைகள்
கோவை மாநகரம் உக்கடம் வின்சென்ட் ரோட்டில் அமைந்த அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 19-10-2007-இல் இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். இந்நிலை யில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு மீண்டும் கட்டப்பட்டு 352 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய் யப்பட்டது. ஆனால் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் குடிசை போட்டு வாழ்ந்து வந்த 330 பேருக்கு வீடு இல்லாது அவதியுற்றனர். இந்நிலை யில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அவர்களது முன்முயற்சியால் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பெரிய நாயக்கன்பாளையத்தில் கட்டப்பட்ட வீடுகள் 330 பேருக்கு இக்காலத்தில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்நிகழ்வில் உக்கடம் பகுதியைச் சார்ந்த கேபிள் முத்தப்பா தலைமையிலான அவ ரது நண்பர்கள் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப் பினர் அவர்களை தொடர்பு கொண்டு அனைத்து முயற்சிகளையும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளக்கிணறு பகுதியில்...
வெள்ளக்கிணறு பகுதியில் சாலையோரம் வசித்துவந்த மக்கள், மழை வெள்ள நேரங்க ளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பாதிக்கப் பட்டனர். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி..ஆர். நடராஜன் அவர்கள் அதிகாரிகளோடு அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனடிப்படையில் தற்போது, அங்கு குடி யிருந்து வரும் 17 குடும்பங்களுக்கு மாற்று ஏற்பாடாக பெரியநாயக்கன்பாளையம் பகுதி யில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் வரும் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்திட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்.
பாதுகாக்கப்பட்ட ஏழைக் குடும்பங்கள்
கோவை மாநகரம் மேட்டுப்பாளையம் சாலை ஜீவா நகர் பகுதியில் பல்லாண்டு காலம் வாழ்ந்து வந்த 253 ஏழைக் குடும்பங்களை ஆக்கிரமிப்பு என்பதன் பெயரால் காலி செய்திட மாநகராட்சி முயற்சித்தபோது கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமை யில் தொடர் போராட்டம் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அவர்களுக்கு எவ்வித கட்டணமும் பெறாமல் வீடுகளை ஒதுக்கீடு செய்திட போராடியதால் கீரணத்தம் காப்பி கடை பகுதியில் தற்போது நகர்ப்புற மேம்பாட்டு வாரி யத்தால் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறிவொளி நகரில்...
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக இடம் கையகப்படுத்தியபோது பூம்புகார் நகர் அரசுப் புறம்போக்கு நிலத்தில் குடி யிருந்த பொதுமக்களுக்கு மாற்று ஏற்பாடாக, பல்லடம் அறிவொளி நகரில் அடுக்குமாடி குடி யிருப்பில் வீடு கொடுக்கப்பட்டது. அதில் விடுபட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கிடைக்காமல் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு பி.ஆர். நடராஜன் எம்.பி. தலையீடு செய்து, மாவட்ட ஆட்சி யர், மாவட்ட வருவாய் அலுவலர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழக அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பேசி பலமுறை முயற்சி செய்து 25 பேருக்கு அறிவொளி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
வாரப்பட்டி ஊராட்சியில்...
சூலூர் சட்டமன்றத் தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டத்தின் காரணமாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அவர்களது முயற்சியின் கார ணமாகவும் 21 தலித் குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா கிடைக்கப் பெற்றது.
போராடிப் பெற்ற 134 பட்டாக்கள்
பல்லடம் பகுதியில் அருந்ததியர் மக்களின் வீட்டுமனை இடங்களுக்கு பட்டா பெற்றுத் தந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நட ராஜன் ஆவார். பல்லடம் வட்டத்தில் சாமலாபுரம் பகுதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக குடி யிருந்து வந்த அருந்ததியர் மக்களை மாவட்ட நிர்வாகம் நீர்நிலைப் புறம்போக்கு எனச் சொல்லி வீடுகளை காலிசெய்ய வேண்டும் என அறிவிப்பு கொடுத்தனர். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அவர்களை நேரில் சந்தித்து தங்களுடைய உள்ளக் குமு றலை தெரிவித்தனர்.
இந்நிலையில் பி.ஆர். நடராஜன், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வினித் அவர்களை நேரில் சந்தித்து சாமலாபுரம் பகுதியில் குடியி ருந்து வரும் அருந்ததிய மக்களை அந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தினார். சாதாரண ஏழை- எளிய மக்கள் வீடுகளை காலிசெய்து விட்டு வேறு இடங்களில் குடியேறுவது என்றால் அதற்கு உண்டான எத்தகைய வசதி வாய்ப்புகளும் இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகம் இவர்க ளுக்கு உரிய வீட்டு மனை இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பெருந்திரள் போராட்டத்தை பி.ஆர். நடராஜன் தலைமை ஏற்று நடத்தினார். இதன் மூலமாக மாவட்ட நிர்வா கம் பாதிக்கப்பட்ட சாமலாபுரம் பகுதி மக்களுக்கு சாமலாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட செந்தேவி பாளையம் பகுதியில் அரசு நத்தம் புறம்போக் கில் வீட்டுமனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டு அவர்களுக்கான 134 பட்டாக்கள் கிடைப் பதை பி.ஆர். நடராஜன் உத்தரவாதம் செய்தார். மேலும் இப்பகுதியில் பள்ளபாளையம் பகுதி யில் விடுபட்டிருந்த 13 குடும்பங்களுக்கு வீட்டு மனை இடங்களுக்கான பட்டாக்களையும், மாவட்ட நிர்வாகத்தோடு பேசிப் பெற்றுக்கொடுத்தார்.
பாதுகாக்கப்பட்ட அருந்ததிய மக்களின் வீடுகள்
இதேபோல பல்லடம் வட்டாரத்தில் பருவாய் ஊராட்சியில் நீர்நிலைப் புறம்போக்கு எனச் சொல்லி, ராஜிவ் நகரில் குடியிருந்து வரக்கூடிய சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை மாவட்ட நிர்வாகம் காலி செய்ய வேண்டும் என குறிப்பாணை வழங்கி நடவடிக்கை எடுத்து, வீடுகளை காலி செய்ய முயன்ற போது நாடாளு மன்ற உறுப்பினர் நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களோடு மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து இந்த இடம் எக்காலத்திலும் மழையால் எந்த பாதிப்பும் ஏற்படாத பகுதி என்பதை எடுத்துரைத்து, எனவே இப்பகுதியை காலி செய்ய வேண்டும் என்று சொன்னால் கடுமையான விளைவுகளை மாவட்ட நிர்வாகம் சந்திக்க நேரிடும் என வலி யுறுத்தியதன் பேரில் இன்று வரை அந்த பகுதி யில் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட அருந்ததிய மக்கள் வசித்து வரக்கூடிய வீடுகள் பாதுகாக்கப் பட்டு இருக்கின்றன.
பல்லடத்தில்...
கடந்த நவம்பர் மாதத்தில் பல்லடம் சட்ட மன்ற தொகுதியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தியபொழுது பல்லடத்தில் வசித்து வரக்கூடிய ஏராளமான உழைக்கும் மக்கள் தாங்கள் குடியிருக்கும் இடங்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அதைத் தொடர்ந்து உடனடியாக மாவட்ட ஆட்சித் தலை வரை நேரில் சந்தித்து சம்பந்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியதன் பேரில் மாணிக்காபுரத்தில் 31 குடும்பங்களுக்கும் அனுப்பட்டியில் ஆறு குடும் பங்களுக்கும் பட்டாக்கள் என்பது உறுதி செய்யப்பட்டு வழங்கப்பட இருக்கிறது. இவ்வா றாக பல்லடம் பகுதியில் அருந்ததிய மக்களின் வாழ்விட பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள் முனைப்போடு செயல்பட்டு மக்களுக்கு பேருதவியாக இருந்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பி.ஆர். நடராஜன் எம்.பி. தனது தொடர் தலையீடு, போராட்டங்கள் கார ணமாக, உழைப்பாளி மக்களுக்கான வாழ்விடங் களை உறுதிசெய்து தந்துள்ளார்.
தொகுப்பு : யு.கே.சிவஞானம்,
சிபிஐ(எம்) கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்