districts

img

ரூ.15 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

சேலம், ஜன.30- பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலத்திற்கு கன் டெய்னர் லாரியில் குட்கா கடத்தி வரப்படுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் மற்றும் தீவட்டிப்பட்டி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், காவல் ஆய்வாளர் ஆனந்த குமார் தலைமையிலான காவல் துறையினர், தீவட்டிப் பட்டி அருகே ஜோடுகுளி பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவிலிருந்து சேலம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, வாசனை ஊது பத்தி  மூட்டைக்கு இடையில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து, கன்டெய்னர் லாரி மற்றும் அதனுடன் வந்த காரையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், அதிலி ருந்த 3 பேரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர்கள் பெங்களூரு கெங்கேரியைச் சேர்ந்த ராம கிருஷ்ண கவுடா மகன் கோபால் (38), வாசு மகன் கிரீஸ் (35), பொம்மனஹள்ளியைச் சேர்ந்த பெரியப்பா மகன் மஞ்சுநாத் (37) என்பது தெரியவந்தது. அவர்களி டமிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட் கள், கன்டெய்னர் லாரி மற்றும் காரை காவல் துறை யினர் பறிமுதல் செய்தனர்.