districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சோதனையில் சிக்கிய குட்கா பதுக்கல் விசாரணை வளையத்தில் காவலர்கள்

ஈரோடு, ஜூலை 14- வாகன சோதனையின் போது பல லட்சம் ரூபாய் மதிப்பி லான குட்கா சிக்கிய நிலையில், இதனை அதிகாரிகளுக்கு தெரியாமல் மறைத்து பதுக்கிவைத்த இரண்டு காவலர்கள் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை சந்திப்பு அருகே, வெள்ளியன்று மாலை, பவானி போக்குவரத்து காவலர்கள் பிரபு (28), சிவக்குமார் (30), வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ‘ஈச்சர்’ வேனில் பல லட்சம் ரூபாய் மதிப்பி லான குட்கா இருந்தது தெரியவந்தது. இதனை முறைப்படி உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல், மறைத்துள்ளனர். மேலும், தனது, நண்பர்கள் இருவரின் துணை கொண்டு, வெப்படைக்கு வேனை அனுப்பி வைத்தனர். அங்கு ஒரு வீட்டில் இறக்கி வைத்து, வேனை எடுத்து செல்லுமாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட வேன்  ஓட்டுநர், ராஜேந்திரன், குட்காவை காவ லர்கள் பறிமுதல் செய்து பதுக்கிவைத்துள்ளதை ஈரோடு மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடம் தெரிவித்துள்ளார். 

அவரது உத்தரவின்படி, பவானி துணை காவல் கண்க ணிப்பாளர் அமிர்தவர்ஷினி தலைமையிலான காவல்துறையி னர், இரு காவல்துறையிடமும் விசாரனை நடத்தினர். இதனை யடுத்து, ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை வெப்படையில் வீட்டிலிருந்து பறிமுதல் செய்து, பவானி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். குட்கா பதுக்கிய காவல்துறையினர் இருவரையும், ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, காவல் கண்காணிப் பாளர் ஜவகர் சனியன்று உத்தரவிட்டார். இருவர் மீதும் துறை  ரீதியான விசாரணை நடத்தப்படும், என தெரிவித்தனர்.

கைதிகளுக்கு கஞ்சா விநியோகம் சிறை சமையலர் பணி நீக்கம்

சேலம், ஜூலை 14- கைதிகளுக்கு கஞ்சா விநியோகம் செய்த விவகாரத் தில், சேலம் மத்திய சிறை சமையலர் பணிநீக்கம் செய்யப்பட் டார்.

சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்தவர் தனபால் (40). இவர் சேலம் மத்திய சிறையில் சமையலராகப் பணி யாற்றி வந்தார். கடந்த ஜூன் 4 ஆம் தேதியன்று சமையல் பணியை முடித்துவிட்டு, பாத்திரங்களை சமையல் அறை யில் வைத்துவிட்டு வந்தார். அப்போது, அவரை சிறைக் காவ லர்கள் சோதனை செய்தபோது, அவரிடம் 140 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோது கைதிக்கு கொடுப்பதற்காக கஞ்சாவைப் பதுக்கி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் கைதிக்கு கொடுப்பதற்காக வெளியில் இருந்து சிறைக்கு கஞ்சாவை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சமையலர் தனபாலை பணி நீக்கம் செய்து சேலம் சிறைக் கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டார்.

கொடிவேரி அணைக்கு செல்ல தடை

கோபி, ஜூலை 14-  கோபி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கொடி வேரி அணை வழியாக அதிக அளவு உபரி நீர் வெளியேறி வருவதால் கொடிவேரி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வரு வதற்கு பொதுப்பணித் துறையினர் சனியன்று தடை விதித்தனர்.

ஈரோடு மாவட்டம் மட்டுமன்றி சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அணைக்கு வருவது வழக்கம்.கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள் ளிட்ட பகுதிகளில் வெள்ளியன்று இரவு கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக கொடிவேரி அணை வழியாக 1020 கன அடி தண்ணீா் வெளியேறி வருகிறது. இதனால் கொடி வேரி அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணை சனியன்று மூடப்பட்டது. சுற்று லாப் பயணிகள் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் பய ணம் மேற்கொள்ளவோ பொதுப்பணித் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அணையைச் சுற்றி சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்லாதவாறு பொதுப்பணித் துறை யினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானை

கோவை, ஜூலை 14-  தடாகம் அருகே உள்ள காளையனூர் விவசாய தோட்டத் துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அங்கு உள்ள பயிர்களை சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கிராமத்துக்குள் கூட்டத்துடன் அல்லது ஒற்றைக் காட்டு யானை அந்த கிராமங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், உயிர் சேதம், பொருள் சேதம் என அனைத்து தரப்பு பொதுமக்களின் வாழ்வாதா ரத்தை சேதப்படுத்தி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண அந்த காட்டு யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்து றையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சனியன்று இரவு தடாகம் அருகே உள்ள காளையனூர் விவசாயி மனோகரன் தோட்டத்திற் குள் புகுந்து ஒற்றைக் காட்டு யானை பயிர்களை தின்று, சேதப்படுத்தியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி மனோகரன், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையி னர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு அந்த ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

ரூ.71 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்

சேலம், ஜூலை 14- கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் சனி யன்று நடைபெற்ற பொது ஏலத்தில், ரூ.71 லட்சத்து 50 ஆயி ரத்திற்கு பருத்தி, எள் ஏலம் போனது.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு  விற்பனை சங்கத்தில் சனியன்று நடைபெற்ற பொது ஏலத் திற்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயி கள் விற்பனைக்காக சுமார் 2,500 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். இதில் பி.டி. ரகப்பருத்தி குவிண்டால்  ஒன்றுக்கு ரூ.6,450 முதல் ரூ.7,460 வரை விற்பனையானது. தொடர்ந்து நடைபெற்ற எள்ளுக்கான பொது ஏலத்தில், வெள்ளை ரக எள் கிலோ ரூ.103.10 முதல் ரூ.136.50 வரையி லும், சிகப்பு ரகம் கிலோ ரூ.113 முதல் ரூ.134.90 வரையிலும் என  மொத்தம் 75 மூட்டை எள் விற்பனையானது. மொத்தம் ரூ.65 லட்சத்திற்கு பருத்தி, ரூ.6.50 லட்சத்திற்கு எள் ஏலம் போனது.

தென்மேற்கு பருவமழை எதிரொலி
சிறுவாணி அணை நீர்மட்டம் 30 அடியாக உயர்வு

கோவை, ஜூலை 14- தென்மேற்கு பருவமழை சீரான முறை யில் தொடர்ந்து பெய்து வருவதால், சிறு வாணி அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஞாயிறன்று நிலவரப்படி சிறுவாணி அணை யின் நீர்மட்டம் 30 அடியாக உயர்ந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் நிலையில், இந்த  ஆண்டு அணையானது நிரம்ப வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கேரளா மாநிலம், மன்னார்காடு அருகே அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை மாநகர் பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் எடுக்க முடியும். ஆனால் அணையின் நீர்மட் டம் குறைந்ததால் அணையில் இருந்து எடுக் கப்படும் குடிநீர் அளவு குறைந்தது. இந்நிலை யில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் அணையின் நீர் பிடிப்புப் பகு திகளில் பரவலாக மழை பெய்து வருகி றது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதற்கு இடையே அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. எனவே அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து. இதன் காரண மாக அணையின் நீர்மட்டம் 30 அடியை தாண்டி உள்ளது. சனியன்று நிலவரப்படி அணையில் 7 சென்டி மீட்டர் மழையும், அடி வாரத்தில் 17 மில்லி மீட்டர் மழையும் பதி வாகி இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவுகளை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். 

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது அணை யில் இருந்து 5 கோடி 70 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டது. அதில் 5 கோடி லிட்டர் குடிநீர் கோவை மாநகர பகுதிக்கு விநியோ கம் செய்யப்பட்டது. தொடர்ந்து அணை பகுதி யில் மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு அணை நிரம்ப வாய்ப்புள்ளது என்றனர்.

250 பேர் 5 மணி நேரம் தொடர்ந்து  சிலம்பம் சுழற்றி நோபல் சாதனை

கோவை, ஜூலை 14- கோவையில் 250 பேர் ஒரே இடத்தில் 5 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றி நோபல் வேர்ல்டு ரெக்கார்ட் சாத னைப் படைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம்பா ளையத்தில் ஆதித்தமிழன் வீர சிலம்பாட்ட கலைக்கூடம் சார்பாக நோபல் வேர்ல்டு ரெக்கார்ட் சாதனை முயற்சி நடை பெற்றது. இக்கலைக்கூட்டத்தில், சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைத்து தரப்பினரும் சிலம்பாட்ட பயிற்சி பெற்று வருகின்றனர். சிலம்பம் மற்றும் பாரம்பரிய கலை களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், இக்கலைக்கூடத்தை சேர்ந்த சிலம்ப பயற்சியாளர் நாகசுந்தரம் தனது மாணவர்கள் 250 பேரை ஒன்றிணைத்து 5 மணி நேரம் தொடர் சிலம்பத்தை சுழற்றி சாதனை படைத்துள் ளார். இந்த சாதனை நிகழ்வு பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. நோபல் வேர்ல்டு ரெக்கார்ட் என்ற சாதனை புத்தகத்தில் சாத னையாக அங்கீகரித்து புத்தகத்தின் நிர்வாகிகள் சான்றி தழ்களை வழங்கினர்.

அணைகள் நிலவரம்

மேட்டூர் அணை 
நீர்மட்டம்:42.760அடி
நீர்வரத்து:4013கனஅடி
நீர்திறப்பு:1000கனஅடி
பவானிசாகர் அணை 
நீர்மட்டம்:69.73/105அடி 
நீர்வரத்து:2266 கனஅடி
நீர்திறப்பு:1155 கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:25.40/72அடி
நீர்வரத்து:1230கனஅடி
நீர்திறப்பு:57கனஅடி
மழையளவு:33 மி.மீ.
சோலையார் அணை
நீர்மட்டம்:112/160அடி
நீர்வரத்து:1406கனஅடி
நீர்திறப்பு:867.82கனஅடி
மழையளவு:28 மி.மீ.
ஆழியார் அணை
நீர்மட்டம்:88.20/120அடி
நீர்வரத்து:398கனஅடி
நீர்திறப்பு:144கனஅடி
மழையளவு:38.6 மி.மீ.